Thursday, October 21, 2010

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....

No comments:

Post a Comment