Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Thursday, November 3, 2011

சர்ச்பார்க் ஸ்டூடன்டின் சிறுபிள்ளைத்தனம்

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள ஆத்மா திருப்தியே தனி. அந்த நிறைவை புத்தக வாசிப்பை பழக்கமாக, விருப்பமாக கொண்டவர்களாலேயே உணர முடியும். எது எப்படி இருந்தாலும், நூலகத்தை மூடுவது என்பது, தான் பெற்ற குழந்தையை தனது கைகளாலேயே கொலை செய்வது போன்றது. இரண்டு செயல்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெ. செய்வது இமாலயத்தவறு மட்டுமல்ல, வரலாற்றுப்பிழையும் கூட

 

தாலி அறுத்தவள் வீட்டில் தலா தலா பெருதனம் என்பார்கள். அதே போல் தமிழ்நாட்டின் நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்த பீடைகளான திமுக, அதிமுக இடையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது. நூற்று எழுபத்திரண்டு கோடி செலவில் நூலகம் அமைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? நூலகமே காணாத கிராமப்புறங்களும், சரிவர பராமரிக்கப்படாத நகர்ப்புற நூலகங்களும் இருக்கும் போது, அண்ணா நூற்றாண்டு நூலகம் தேவை தானா? மேலும், அண்ணா திமுக என்ற கம்பெனியின் ஸ்தாபகர். அவரின் நூற்றாண்டு விழாவை கம்பெனி செலவில் கொண்டாடியிருக்க வேண்டும். அதற்கு அரசுப்பணத்தை வீணடித்ததே தவறு. ஒழியட்டும். இப்போது கொட நாட்டு அரசி வந்ததும் அதை மாற்றியிருப்பது முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன? ஏற்கனவே, புதிய தலைமை செயலகத்தை தன் விருப்பம் போல் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள ஜெயா இன்னும் இது போல் என்னென்ன தண்ட செலவுகளை செய்ய போகிறாரோ? தட்டி கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்ட பிரசண்டன் என்ற கதையாக, அராஜக திமுகவின் அருமை தலைவியை கேள்வி கேட்க இங்கு நாதி இல்லை. கேட்கவேண்டிய எதிர்கட்சி தலைவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

 

கட்சியை உடைக்க போகிறார்கள் என்றதுமே அவர் பல்டி அடித்து ஜெயா காலில் சரணாகதி அடைந்து விட்ட விஜயராஜிடம் வீரத்தை எதிர்பார்க்க முடியாது. பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதை ஜெயா ஆட்சி செய்தால் விபரீதங்கள் அரங்கேறும் என்று மாற்ற வேண்டியது தான். அடுத்த நான்கரை ஆண்டுகள் தமிழகத்துக்கு ஏழரை. மொத்தத்தில் ஜெயாவின் இந்த முடிவு ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி,ஆதரிக்கத்தக்கதல்ல.

 

நூலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  பெரும்பாலான இளைஞர்கள் தேர்வில் "பாஸ்" ஆக வேண்டும் என்ற நோக்கோடுதான் கல்விச்சாலைகளுக்கு செல்கின்றனர். குறிப்புக்களையும் தகவல்களையும் தேடுபவர்கள் சுலபமாக இணைய தளம் மூலமாக தேடிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூலகங்கள் சரிவர பராமரிக்கப்பட்டாலே போதும் என்பதுதான் உண்மை நிலை. எப்படியோ, தேவையோ தேவை இல்லையோ, விளம்பரத்திற்காக ஒரு பெரிய நூலகத்தை கட்டியாகி விட்டது. இதனால் பயன் அடைந்தவர்கள் மார்ட்டின் போன்றவர்கள் என்பதும் உண்மைதான். இந்த நிலையில் குழந்தைகள் மருத்துவ மனை உருவாக்க வேண்டுமென்றால் புதிதாக கட்டுவதுதான் சிறந்ததாக இருக்குமே அன்றி இருக்கும் நூலக கட்டிடத்தை மாற்றுவது மற்றவர்கள் குறை காண வழி வகுக்கும்.

 

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது! சிற்றூர் வரை நூலக இயக்கம் போதுமான நிதி ஆதாரத்துடன் துவக்கப் பட்டாலே வளரும்! மற்றபடி அண்ணா, அம்பி நூலகமெல்லாம் வெறும் விளம்பரக் கட்டிடமே! ஊழல் கட்டிடங்களில் சரஸ்வதி குடியிருக்க மாட்டாள்!( சொந்த புத்தகங்களால் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து வாசிக்கும் பழக்கமுள்ள ஜெயலலிதா சிந்திப்பாரா? )

 

இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். எட்டு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்து தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் மாற்றப்படுவது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் விஜயகாந், மற்றும் சரத்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஈவிகேஎஸ் இளங்கோவன், சீமான் ஆகியோர்ன் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இவர்கள் (தெளிவாக & ஸ்டெடியாக)? விளக்க வேண்டும். இது இவர்களது மிக முக்கியமான கடமையாகும். செய்வார்களா? "காலின் அளவுக்கு ஏற்ப செருப்பு தைக்கும் அல்லது வாங்கும் நிலை போய், செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும் காலம் வந்ததே! துக்ளக் தர்பார்!!

 

அராஜகம் ஆ தி மு க ஆட்சி அமைந்ததுமே ஆரம்பம். சமச்சீர் கல்வி ஆரம்பிப்பதில் குளறுபடி, தலைமைச் செயலகம் மாற்றியமைப்பு, பரமக்குடியில் ஆறு பேரை சுட்டுக் கொன்றது, காவல் நிலையம் சென்றவர் விசாரணைக்குப் பின் பலி என்று தொடர்கிறது. இப்போது அண்ணா நூலகம் மருத்துவமனை ஆகிறது. இந்த ஆட்சியில் அனைவரும் மருத்துவமனையில் அல்லது மரணக்கிடங்கில் இருக்க வேண்டியது தானா? ஆட்சியில் அமர்த்திய அருமை மக்களே யோசியுங்கள்…

 

யார் இட்ட சாபமோ நம் மாநிலம் கடந்த 44 ஆண்டுகளாக இந்த இரண்டு தீய சக்திகளிடமும் மாட்டிக்கொண்டு சீரழிந்து வருகிறது!ஆட்சிக்கு வந்து மாதம் ஆறு ஆகியும் ஜெயா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்போ தேவையில்லாமல் ஒரு நூலகத்தை மூட திட்டமிடுகிறார். அடுத்து என்ன? தமிழகத்தில் கருனைகிழங்கு பயிரிடவோ விற்கவோ தடை செய்ய சட்டமா?? அஇஅதிமுக என்பது "அ[வர்] தி[றப்பதை] இ[வர்] மூ[டுவார்] அ[ம்புட்டுதான்] கழகம்" என்பதின் சுருக்கமா?