Tuesday, May 14, 2013

தமிழ் அடிமைகள் !!

பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் மது பாணங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. ஒரு தனி மனிதனை அரசியல் தலைவர்கள் மது அருந்த செய்து அவனை மதி கெட செய்து இது போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். எனவே மதியை கெடுக்கும் மது கடையையும் சேர்த்து தடை செயுங்கள் - எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே".

நல்ல விஷயங்களை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதற்கும் ஒரு எல்லை உண்டு. 1989 வருடங்களில் மரத்தை வெட்டி ரோட்டை அடித்து, 10 நாட்கள் அராஜகம் செய்து பேருந்தை இயங்காமல் செய்து, கடைகளை மூடி சொல்லி மாளாது அத்தனை அராஜகம். மனிதனை பார்த்தால் மகிழ்ச்சி பிறக்க வேண்டும். ஆனால் இவர்களை பார்த்தால் வெறுப்பும் அருவருப்பும் பிறக்கிறது. உண்மையை சொன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒரு வீர பெண்மணிதான். வெட்டி பேச்சி பேசுகிறவர் நிறைந்து இருக்கும் தமிழ்நாட்டில் மிக பெரிய விசயங்களை செயல்படுத்த கூடிய வல்லமை நமது தமிழக முதல்வரால் மட்டுமே முடியும்.

ராமதாஸ் நாகரீகத்தை இழந்து வெகு நாளாகி விட்டது. வன்முறையை தூண்டுவதை நிறுத்த மறுப்பதல்லாமல், அதை மற்றவர்கள் மேல் சுமத்த முயற்சிக்கிறார். காடுவெட்டி குருவை தலைவனாக கொண்ட ஒரு இயக்கம் நாகரீகமாக நடந்துகொள்ள வாய்ப்பில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மரத்துக்கு குறைந்தது 100 கோடி யாவது மதிப்பீடு வையுங்கள். அப்போது தான் இயற்கையின் மதிப்பு அவர்களுக்கு தெரியும்.  ராமதாசும் அன்புமணியும் வன்முறையாளர்களாக மாறியிருப்பது வேதனை. வன்னியர்களில் பெரும்பாலனோர் விவசாய கூலிகள். படிக்காதவர்கள். வறுமையில் வாடுபவர்கள்.அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல், வன்னியர்களை தீய வழியில் இட்டுச்செல்கிறார் ராமதாஸ். பாமக ஓர் அரசியல் இயக்கம் என்றால் ஒரு சமுதாயத்திற்காக மட்டும் குரல் கொடுக்க முடியுமா. பாமகவின் தலித் பிரதிநிதிகளின் நிலையம் கருதும் என்ன? தலித் ஒருவரை தலைவராக கொண்ட கட்சி பாமக என்றால் அக்கட்சிதலைவரின் நிலை என்ன? பாமக தலித்தலைவரை வெறும் பொம்மையாக பயன் படுத்துகிறதா? பாமகவினரை தவறான வழியில் நடத்தி, வன்னியர்களை வன்முறையாளர்களாக மாற்றி தன சுயநலத்துக்காக பயன்படுத்தும் ஒரே தலைவர் ராமதாஸ் மட்டுமே. இந்த சுயநல தலைவர்களை ஏற்றுகொள்ளும் சமூகம் அதற்கான விலையையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்... பாவம் ராமதாசின் அடிமைகள் !!

பாமக, விடுதலை சிறுத்தைகள், இந்த இரண்டு கட்சிகளுமே தடை செய்யப்படவேண்டும் - இதில் உள்ள பலர் சாதி கூட்டம் இருக்கிறது என்ற திமிரில் கட்ட பஞ்சாயத்து கொலை என தினமும் தொழிலாக செய்து வருகிறார்கள் - திண்டிவனம் துவங்கி கும்பகோணம் வரை இவர்களது கட்ட பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுவருகிறது - இந்த இரு கட்சிகளிலும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த கட்ட பஞ்சாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளார்கள். காவல் துறையில் உள்ள இந்த இரு சாதியினரை சேர்ந்த சில உயர் அதிகாரிகளே இதற்கு பெரிதும் உடந்தையாக உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது - குறிப்பாக திண்டிவனம் முதல் கும்பகோணம் வரை உள்ள கிராமங்களில் இவர்களது அட்டகாசம் பொறுக்கமுடியவில்லை - இந்த இரு சாதி அமைப்புகளின் மாவட்ட நகர பொறுப்பாளர்களின் தினசரி நடவடிக்கைகளை உளவுத்துறை கவனித்தால் உண்மை தெரியும் - தமிழக முதல்வர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நிச்சயமாக யாரும் துணிவோடு எடுத்ததில்லை - வரும் தேர்தல்களில் இந்த நடவடிக்கை முதல்வர் வெற்றிபெற துணைபுரியும் என்பதில் சந்தேகம் வேண்டாம் - இவர்கள் மேல் மற்றவர்கள் அந்த அளவு வெறுப்பாக உள்ளார்கள் - வீர வசனம் பேசியவர்கள் 12 நாளிலேயே ஆடிப்போய்விட்டார்கள்.