Saturday, May 30, 2009

தமிழர்களுக்கு அதிக அளவில் உதவி தேவை

வவுனியா பகுதியில் அமைந்துள்ள மாணிக் பண்ணை அகதி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள். தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த முகாமை ஐநா பொதுச்செயலர் பான் கி

நியூயார்க், மே 28: இலங்கையின் வடக்கில் தமிழர்களுக்கென்று அமைக்கப்பட்ட மிகப்பெரிய முகாமில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் உடனடியாக, பெரும் அளவில் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு தெரிவிக்கிறது.

  இப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஓச்சா இதை நியூயார்க் நகரில் புதன்கிழமை இரவு தெரிவித்தார்.

  அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஏராளமானோர் தங்களுடைய உற்றார் உறவினரை இழந்துவிட்டனர். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இருந்தால் எங்கே என்று தெரியாமல் மன உளைச்சலில் அவதிப்படுகின்றனர்.

  போர்க்களத்தில் குண்டு காயம் அடைந்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் ஒருவகையில் உடல் நலம் இல்லாமலேயே இருக்கின்றனர். மாதக்கணக்காக சரியான சாப்பாடு, தூக்கம் போன்றவை இல்லை என்பது முதல் காரணம். ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி, கை-கால் மூட்டு வீக்கம், சர்க்கரை வியாதி, சிறுநீரக் கோளாறு, பசியின்மை என்று பாதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள பெண்களின் துயரங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

  முதியவர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்கள் கணக்கற்றவைகளாக இருந்தாலும் தங்கள் குடியில் பிறந்த இளைஞர்கள், யுவதிகள், சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமே என்ற ஒரே ஆசையில், முகாமில் உள்ள அவல நிலைகளைப் பொருள்படுத்தாமல் உடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

  அனைவருமே போர்க்களத்திலே மாதக்கணக்காக இருந்தனர். ராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதல் போர் விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக தங்களுடைய வீடு, வாசல், நில-புலன்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு கட்டிய துணியுடன் வெளியேறி பதுங்கு குழிகளிலும் கட்டாந்தரைகளிலுமாக மாறிமாறி வாழ்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர். ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை கல் நெஞ்சையும் கரைய வைப்பதாய் உள்ளது.

  முகாமில் இருப்பவர்களுக்கு மாற்றுத்துணி இல்லை, சாப்பிட பாத்திரங்கள் இல்லை, படுத்துக்கொள்ள பாய், தலையணை கிடையாது. போர்த்திக்கொள்ள போர்வை, சால்வை இல்லை.

  முகாமில் கழிப்பறை, குளியலறை வசதிகள் போதுமானதாக இல்லை. குடிநீரும் மற்ற நீரும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. எனவே சுகாதாரமும் சீர்கெட்டுக்கிடக்கிறது. மருத்துவத் தேவைகளை ஓரளவுக்குத்தான் பூர்த்தி செய்யும் விதத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் சில மட்டுமே இருக்கின்றன.

  இதுவரை முகாமுக்குச் செல்ல பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாகச் செல்ல அனுமதி தரப்படுகிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் வாகனங்கள் தங்களுடைய கொடிகள் இல்லாமல்கூட செல்லலாம் என்று ராணுவம் அனுமதிக்கிறது.

  முகாமில் உள்ள தமிழர்களில் விடுதலைப் புலிகள் இருக்கின்றனரா என்று ஒவ்வொருவராகச் சோதித்த ராணுவம் இப்போது முகாமைவிட்டு வெளியேறி அருகிலேயே முகாமிட்டிருக்கிறது. இனி தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிகளைச் செய்யலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இத் தகவல்களை ஐ.நா.வின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த ஓச்சா தெரிவிக்கிறார்.

India’s GDP @ 6.7% - மந்த நிலையிலும் இந்தியா சாதனை ஒட்டுமொத்த உற்பத்தி 6.7%

சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.7 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி 5.8 சதவீதமாக சரிந்தபோதிலும் நாட்டின் ஜிடிபி 6.7 சதவீதத்தை எட்டியுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவியபோதிலும் இந்தியாவின் ஜிடிபி முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைந்த போதிலும் அது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறப்பான அளவாகவே உள்ளது. பிற நாடுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 2 சதவீத அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

நான்காம் காலாண்டில் உற்பத்தித் துறை வளர்ச்சி 1.4 சதவீதமாகக் குறைந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் உற்பத்தித் துறை 6.3 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டில் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் தொழில்துறை உற்பத்தி 8.2 சதவீதமாக இருந்தது.

2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவாக 9 சதவீதத்தை எட்டியது. அந்த ஆண்டில் நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் (2008-09) ஒட்டுமொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் அது சற்று குறைந்து 6.7 சதவீதமாக உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சற்று குறையும் என்று எதிர்பார்த்ததாக மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறையின் வளர்ச்சி 1.6 சதவீதமாகும். முந்தைய ஆண்டில் இது 4.9 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித்துறை வளர்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் உற்பத்தித் துறை வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இத்துறை 10 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More thoughts….இந்தியாவுக்காகப் போரிட்டோம்- இராஜபக்ஷே?

After reading this இந்தியாவுக்காகப் போரிட்டோம்- ராஜபட்ச, certainly it takes me the following conclusion… sorry, i was pushed too :)

I was thinking in many ways like this (again pushed too)…

1) இந்தியாவுக்காக போரிட்டோம் தமிழக தலைவர்கள் வாழ்த்தினார்கள் என்பது ராஜபக்சே சொல்லித்தான் யாருக்காவது தெரியவேண்டுமென்றால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். நடக்கிற விடயங்களை வைத்து ஐந்து வயது குழந்தை கூட இதைச் சொல்லும்

2) படிபறிவு இல்லாத ஜென்மங்கள் புலம்புவதையெல்லாம் பெரிதுபடுத்த கூடாது. சிங்கள ராணுவம் அடிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல் வந்து நின்றது எங்கள் தமிழ்நாட்டில்தான் என்பதை சுலபமாக மறந்துவிட்டார். இந்தியர்களை பொறுத்தவரைக்கும் இலங்கை பிரச்சினை என்பது நன்றி கெட்ட நயவஞ்சகர்களால், பயங்கரவாதிகளால் எங்கள் சொந்த மண்ணில் நடந்த ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு முன், படுகொலைக்கு பின் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறோம்.தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களுக்கு நன்றி காட்டும் லட்சனம் இதுதானா?

3) இந்தியாவின் சார்பாகப் போரிட்டோம் என்று சொல்வதை விட எங்கள் சார்பாகப் போரிட்டு இனப் படுகொலைகளைச் சரியாகச் செய்து முடித்த காங்.அரசிற்கு நன்றி!
எஙகளைப் பழி பாவத்தில் இருந்து காப்பாற்றி ஐநா மன்றத்தில் எங்களுக்காகக் குரல் கொடுத்து உத்தமப் பட்டம் வாங்கித் தந்த சோனியா அரசிற்கு நன்றி!
இரு நாட்டு அதிகாரியாய் நடந்து எங்களை வழிநடத்தி முழுமையான சிங்கள நாடாக மாற்றித் தந்துள்ள நாராயணன், மேனன் முதலான அதிகாரிகளுக்கு நன்றி!
எங்களிடம் வாங்கிய செல்வத்திற்கு வஞ்சமில்லாமல் எங்களின் தூதர்களாக விளங்கிய இராம், சோ, சு.சா. முதலான கும்பல்களுக்கு நன்றி! இனி நான் / நாங்கள் யார் என்பதைக் காட்டப் போகும் வரை பொறுமை காக்கும் அனைவருக்கும் நன்றி என்றல்லவா சொல்ல வேண்டும். இதில் ஏன் அப்பாவி இந்திய மக்களையும் தமிழக மக்களையும் கூட்டாளி ஆக்குகின்றார். நம் மண்ணில் நாமே மண்ணை வாரிக் கொண்டாற் போல் பகைவர்களிடம் ஆளும் பொறுப்பை ஒப்படைத்தோம் அல்லவா? அதுதான் கொக்கரிக்கிறார். காலம ஒரு நாள் மாறும்! அறம் வெல்லும்!

4) தமிழ் ஈழத்திலிருந்து வரும் செய்திகள், படங்கள், இராஜபக்ஷே எவ்வளவு கொடூரமான முறையில் தமிழர்களை கொன்று குவித்திருக்கிறான் என்பதை காட்டுகின்றது. இதைப் பார்க்கும் ஒவ்வொரு தமிழ் இரத்தம் ஓடும் தமிழனின் இதயத்திலும் இரத்தம் கசிந்துக்கொணடிருக்கிறது. தமிழன் எந்த இந்தியாவை தனது தாயகம் என எண்ணியிருந்தானோ அந்த இந்தியா இந்தக் கொடிய செயலுக்கு உதவியதோடு மட்டும் நிற்காமல் இன்னும் கொடியவன் இராஜபக்ஷேவிற்கு தொடர்ந்து உதவுவதை நினைத்து வேதனையில் வாடி தனது இனம் இன்று உலக அரங்கில் அனாதையாக, அகதிகளாக, ஆதரவற்றவர்களாக, நாதியற்றவர்களாக, நாடற்றவர்களாக அலையும் நிலையை எண்ணி எண்ணி ஏங்கி தவிக்கிறான். இந்த நிலையிலும் தமிழர்களின் போலி தமிழின தலைவர்களது துரோகம் தொடர்வதையும் எண்ணி வேதனையில் வாடுகிறான். இதற்கு முடிவு ஏற்பட தமிழினம் தடைகளை தகர்ந்தெறிய முயலவேண்டும். தோல்வியே வெற்றியின் படி என்பதை உணர்ந்து வீறுகொண்டு எழுந்தால் இறுதி வெற்றி தமிழினத்திற்கே.

5) விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை ..../ இது உண்மைதான். ஆனால் ஈழ மக்களுக்கு தமிழகம் எப்போதும் ஆதரவாக இருக்கும். புலி வேறு, ஈழ மக்கள் வேறு. இதை ஈழ-புலிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனல் அதுதான் உண்மை. புலிகள் செய்த வன்முறையால் தமிழகம் பிரம்மித்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் குளம்பி இருந்தது. இப்போது புலிகள் இல்லாததால் தமிழகத்தில் ஈழ எதிர்ப்பு இருக்காது. வை.கோ, நெடுமாறன்.. போன்றோர் புலிகளை முன்வைத்து ஈழ பிரச்சினையை அனுகாமல் ஈழ மக்களுக்காக அனுகினால் ஈழம் மலரும். மேற்க்கதிய நாடுகலில் ஈழம் குறித்து ஒரு விழிப்பு உணர்வு வந்துள்ளது. இந்த ராஜபக்சே என்ன குதித்தாலும் மேற்க்கு நாடுகள் இவரை சும்மா விடபோவது இல்லை. ரஜபக்சே உலக கோர்ட்டில் தமிழர்களை 'Ethnic cleansing ' செய்தார் என குற்றம் சாட்டப்படுவார். அப்போது இந்த சுண்டைகாய் சீரீ லங்கா சும்மா வயை மூடிக்கொண்டு இருக்கும் வேரேதும் செய்ய முடியாது. இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஈழ தமிழர்கள் மறுபடியும் கோஸ்ட்டி சண்டை போட்டு கெடுதுக்கொள்ளக்கூடாது. தமிழகத்தில் தமிழின உணர்வு உள்ள ஒரு தலைவர் வர வேண்டும். வருவாரா…

6) ராஜபட்சயை பாராட்டிது வேறு யார் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுக்க நாதியற்ற தமிழின துரோகிகள்.

I always believe on onething…

சூரியனை பார்த்து நாய்கள் ஊளையிடுகிறது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”

Video : Sri Lankan War Victim’s stories untold : CNN


More than 20,000 civilians were killed in the final months of Sri Lanka's civil war -- nearly three times previous estimates, The Times newspaper in Britain reported Friday.

Per CNN’s Sara Sidner,

“I’m back in the helicopter with the U.N. delegation leaving Sri Lanka’s war torn north.

I am beside myself with frustration. We we’re given mere minutes to speak with the victims of war now living in camps.

There are more than 250,000 people in these camps and we only got to talk to two.

No matter what anybody writes from this trip it will not be sufficient.

We were hurried by the soldiers and hurried by the U.N. delegation that had a flight to catch.

I realize we would not have had much of an opportunity at all to tell the civilians’ account of the war if it wasn’t for this chance handed to us by the U.N., but as far as I’m concerned the story of the innocent caught in the middle of Sri Lanka’s war still hasn’t been told properly.”

இந்தியாவுக்காகப் போரிட்டோம்: ராஜபட்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான் என இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு உள்நாட்டு அரசியல் நிலைமைக்கு ஏற்ப தீர்வு காணப்படும் என்கிறார் அவர்.

"தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"இனப் பிரச்னைக்கு இலங்கை நிலைமைக்கு ஏற்ப, அரசியல் தீர்வு காணப்படும். இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகத்தான் இலங்கை அரசியல் சட்டத்துக்கு 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்திய நிலைக்கும் ஏற்ப புதிய தீர்வு காணப்படும். இலங்கையின் அனைத்து தரப்பினரின் யோசனைகளும், அச்சங்களும் அப்போது கருத்தில் கொள்ளப்படும்.

இந்தியாவுக்காக போரிட்டோம்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போர் எங்களுக்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும்தான். 18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகள் மேற்கொள்ள வேண்டிய போரை நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம். விடுதலைப் புலிகளை நாங்கள் கொன்றுவிட்டதால் இந்திய அரசு அதற்காகப் போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இந்தியாவுக்கு நன்றி: விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய போரை ஆதரித்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களுடைய நன்றி. மற்றெல்லாவற்றையும்விட இந்தியா என்ன நினைக்கிறது என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம். இந்திய அரசு எங்கள் பக்கம்தான் என்பதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தோம்.

புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும் வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.

புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபட்ச.

பிரித்தானியாவில் 12 நாளாக ரிம் மார்ட்டினின் இனம் கடந்த பட்டினி போராட்டம்

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழினத்தின் நாட்டை அங்கீகரிக்க ஒரு நாடு இல்லை என்ற போதிலும் பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் 10 வரையிலான தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தை அலங்கரித்துள்ளது.

தமிழினம் படும் துன்பங்களை நேரில் கண்ட ரிம் மார்ட்டின் அவர்கள் 4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்றுடன் 12 ஆவது நாளாக உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை பாதிப்படையும் போதிலும் தமிழர்களுக்காக முன்னெடுக்கும் இந்த உன்னத தியாக போராட்டத்தை தளராத மன உறுதியுடன் தொடர்கின்றார்.

இதேவேளை இன்று (30.05.09) காலை பிரித்தானியாவின் பிரதம ஊடகங்கள் ஆன Sunday observer மற்றும் Times ஆகியன சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையின் போது காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை நாடாளுமன்ற சதுக்கத்தில் நேரடியாக வந்து சேகரிக்க இருப்பதால் பாதிக்கப்பட்ட உங்கள் உறவினர்களின் புகைப்படங்களை எடுத்து வந்து இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் படி தாழ்மையாக கேட்டுகொள்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்கள்.

The Times பத்திரிகையின் நேற்றைய பிரதியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப்படுகொலை தொடர்பான செய்திகள் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகங்களின் வருகையை முன்னிட்டு தமிழ் இளையோரால் கவனயீர்ப்பு தெரு நாடகம் ஒன்று நாளை நாடாளுமன்ற சதுக்கத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

தமிழ் மக்களின் அவலத்தை ஊடகங்கள் மூலம் வெளிக்காட்டுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாளை நாடாளுமன்ற சதுக்கத்தை நிறைக்கும்படி வேண்டுகின்றனர் இளையோர்கள்.

 

 

 

 

World may never know Sri Lanka death toll: UN

The world will probably never find out how many innocent civilians died during the bloody final phase of Sri Lanka's war against

Aerial view of former battlefront in Vavuniya

An aerial view of the former battlefront in Vavuniya. The UN said that the world may never know the death toll in Sri Lanka. (Reuters Photo)

Tamil Tigers rebels, the UN humanitarian chief said on Friday.
The United Nations believes that anywhere from 80,000 to 100,000 people died in what was one of Asia's longest modern wars, erupting in earnest in 1983 when Tamil Tiger rebels began to fight for a separate state for Sri Lanka's minority Tamils. In the final months of the war, the civilian death rate rose alarmingly as government forces surrounded the Liberation Tigers of Tamil Eelam (LTTE), who retreated to a tiny strip of coast in northeastern Sri Lanka, where the United Nations says they kept hundreds of thousands of civilians as human shields.


UN under-secretary-general John Holmes, who oversees the United Nations' many humanitarian operations, said in an interview that it was unclear how many died in the months before Sri Lanka declared victory over the LTTE on May 18.

He also disputed a death toll reported in The Times of London that cited a "UN source" to support an estimate that at least 20,000 people were killed during the months-long final siege.
"That figure has no status as far as we're concerned," Holmes said. "It may be right, it may be wrong, it may be far too high, it may even be too low. But we honestly don't know. We've always said an investigation would be a good idea."

He said it was based on an unofficial and unverified UN estimate of around 7,000 civilian deaths through the end of April and added on roughly 1,000 more per day after that. Holmes said the initial figure of 7,000 deaths had been deemed far too questionable for official publication. Those were "estimates based on the best evidence that we had, but that wasn't very good evidence because we weren't really present in the (battle zone) in any systematic way," Holmes said. "That's why we didn't publish them." 

EVIDENCE OF MASS GRAVES
He said there would likely never be a reliable death toll. "I fear we may (never know), because I don't know that the government would be prepared to cooperate with any inquiry," Holmes said. But there was no doubt "several thousand" civilians had died during the siege, he added.
During that siege, Holmes repeatedly criticized the government for shelling areas where civilians were trapped, warning that it could lead to a "bloodbath". He also criticized the LTTE for treating innocent civilians as hostages. Both sides rejected the UN charges. Sri Lanka's UN mission did not return calls requesting comment.

The UN Human Rights Council decided this week not to investigate the civilian deaths in the war, a decision that human rights groups have described as disappointing. British media reports also said that aerial photographs taken when a UN delegation flew over the former conflict zone last week showed evidence of mass graves.

Photos of those locations taken by a reporter traveling with the delegation showed no clear signs of mass graves, though some individual gravesites might be visible. Holmes said the appearance of makeshift cemeteries was no surprise. "A lot of people were killed, several thousand, so you would expect to see a lot of graves there," he said.

In an editorial, The Times wrote that "the UN has no right to collude in suppressing the appalling evidence" of a government-executed massacre. This clearly annoyed Holmes. "I resent this allegation that we've been colluding with the government in some way or not taking sufficient notice," he said. "We have been the ones drawing attention to this problem when the media weren't very interested several months ago."

Related articles:

In Tamil: இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்தது சிறிலங்கா; 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை- 'த ரைம்ஸ்'
In English: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6391265.ece 
http://ursdeva.blogspot.com/2009/05/amnesty-international-calls-independent.html

Amnesty International calls independent probe for Srilanka’s ‘bloodbath’

Amnesty International on Saturday called for an independent probe into the number of civilians killed in the final weeks of the war against LTTE and also urged the UN to reveal its own estimates.

The call by the rights group followed a report in the Times of London newspaper on Friday citing confidential UN reports that more than 20,000 civilians were killed by Sri Lankan army shelling.  The report followed weeks of allegations that large numbers of civilians had been killed as the army closed in on Tamil Tiger rebels to end the war.

Amnesty's Asia Pacific director Sam Zarifi accused both sides of war crimes and called for an independent international probe.  "The Times report underscores the need for this investigation and the UN should do everything it can to determine the truth about the 'bloodbath' that occurred in northeast Sri Lanka," Zarifi said in statement. The statement said the UN "must immediately publicise its estimate of the number of civilians killed by the two sides in the final weeks of fighting".

Related articles:
In Tamil: இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்தது சிறிலங்கா; 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை- 'த ரைம்ஸ்'
In English: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6391265.ece

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

 

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது.

அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்தது சிறிலங்கா; 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை: 'த ரைம்ஸ்'

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கி மற்றும் துப்பாக்கி தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்'  நாளிதழ் தெரிவித்திருக்கின்றது. 

தமிழ் இனப் படுகொலைக்கான ஆதாரங்களை சிறிலங்கா அரசாங்கம் அழித்துவிட்டதாகவும் அதற்காகவே போர்ப் பகுதிக்குள் எவரையும் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பேரழிவுக்கான பட ஆதாரங்களையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டிருக்கின்றது.

இது தொடர்பாக 'இலங்கை கடலோரப் பகுதிகளில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை தொடர்பான சிறிலங்கா அரசின் பச்சைப் பொய்யை அம்பலப்படுத்தும் படங்கள்' என்ற தலைப்பில் 'த ரைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெனீவாவில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்கா படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதை சிறிலங்கா குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.


[படம்: த ரைம்ஸ்]

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் யாரையும் நாங்கள் கொல்லவில்லை என்றும், தமிழ் மக்களின் சாவுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில், 'த ரைம்ஸ்' நாளிதழ் சார்பில் தமிழ் மக்கள் படுகொலை குறித்து இலங்கையில் ஒரு வாரம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்கா படையினரின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு உயிரிழந்திருக்கின்றனர்.

இரகசியமான ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் போர் நடைபெற்ற பகுதியில் இருந்து வெளியேறிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், போர்ப் பகுதி மீது உலங்குவானூர்தியில் பறந்தவாறு எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் போர் வல்லுநர்கள் நடத்திய ஆய்வுகள் ஆகியவை இந்த படுகொலைக்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன.

இலங்கைப் போரின்போது அப்பாவித் தமிழ் மக்களின் புகலிடமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு வலயப் பகுதிகள் கொலைக்களமாக மாறியிருக்கின்றன.

இலங்கை போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கசியவிட்ட ஆவணங்களின்படி 2009 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஏறக்குறைய 7 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மே மாதத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கு அடுத்த நாளான 19 ஆம் நாள் வரை 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மே மாதத்தில் சிறிலங்கா படையினர் வீசிய குண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது.

மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை முழுமையானதல்ல. இது மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.


[படம்: த ரைம்ஸ்]

மே மாதத்திற்கு முன்பு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பற்றிய முழு ஆவணங்களையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் கைப்பற்றி பாதுகாப்பு வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்தது. அதில் சிறிலங்காப் படையினர் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களால்தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று
தெரியவந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் உயிரிழந்தோரில் 64 விழுக்காட்டினர் சிறிலங்காப் படையினரின் குண்டுவீச்சுக்கு பலியானவர்கள் ஆவர்.

வேறு சிலரை விடுதலைப் புலிகளும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது மேலும் அதிகரித்தது.

இந்த இரு மாதங்களிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 129 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளிலும், அதற்கு வெளியேயும் விடுதலைப் புலிகளும், சிறிலங்காப் படையினரும் அமைந்திருந்த ஆயுத நிலைகள் குறித்த படங்கள் 3 பாதுகாப்பு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி பார்த்தால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் எவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்று
தெரியவந்துள்ளது.


[படம்: த ரைம்ஸ்]

ஒருவேளை விடுதலைப் புலிகளின் பீரங்கிகள் தவறான திசையில் வெடித்திருந்தால் எவரேனும் உயிரிழந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் படை அதிகாரியும், பிரித்தானிய படை சார்பில் நடத்தப்படும் இதழின் ஆசிரியராக இருந்தவருமான சார்லஸ் ஹேமன் கூறியிருக்கிறார்.

இந்த உயிரிழப்புக்கள் அனைத்தும் சிறிலங்காப் படையினரால்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வானில் வெடித்து தரையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பீரங்கி குண்டுகள் மூலம் சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றது.

பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இதுபோன்ற பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையின் 3 ஆவது பிரிவின்படி போர்க் குற்றமாகும்.

இந்த உடன்படிக்கையில் சிறிலங்கா அரசாங்கமும் கையெழுத்திட்டுள்ளது. சிறிலங்கா படையிடம் 81 மில்லி மீற்றர் தொடக்கம் 120 மில்லி மீற்றர் வரை அகலமுள்ள பீரங்கி குண்டுகள் உள்ளன. இவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இவை வெடித்தால் மரங்கள் கருகி குச்சிகளாகிவிடும். ஆனால் இதுபோன்ற ஆயுதங்கள் எதுவும் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்றும் சிறிலங்கா படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மே மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. மே 13 ஆம் நாள் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலின் உக்கிரத்தால் அப்பகுதியில் சேவையாற்றி வந்த மருத்துவப் பணியாளர்களும், மனித நேயப் பணியாளர்களும் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வர முடியவில்லை.

இதனால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவ வசதியின்றி படுகாயங்களுடன் போராடினார்கள். பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் பதுங்கியிருக்கலாம் என்பதால் அதன் மீதுதான் சிறிலங்காப் படையினர் தொடர்ந்து குண்டுகளை வீசித் தாக்கினார்கள்.


[படம்: த ரைம்ஸ்]

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகள் எங்கு அமைந்துள்ளன என்ற விவரங்களை அதில் பணியாற்றும் மருத்துவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

அவ்வாறு செய்தி தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த மருத்துவமனைகள் மீது சிறிலங்காப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய கொடுமையும் அரங்கேறியிருக்கிறது.

பிற்குறிப்பு - 1

சாட்சியம் இல்லாத படுகொலைகள்

தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக சாட்சியமே இல்லாத போரை சிறிலங்கா அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்றும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் போருக்கு சாட்சியமே இருக்கக்கூடாது என்ற
எண்ணத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது.

போரின்போது என்ன நடைபெற்றது என்பதை வெளியில் சொல்வதற்காக யாருமே இருக்கக்கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது. போரின்போது காயமடைந்த மக்களுக்கு மருத்துவர்கள் 3 பேர் மருத்துவம் அளித்தனர். அவர்கள் மூலம் போரின் கொடுமைகள் வெளியுலகிற்கு தெரிந்துவிடும் என்பதால் அவர்கள் மூவரையும் பொய்யான செய்திகளைப் பரப்பியதாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் கைது செய்து வைத்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி 'த ரைம்ஸ்' நாளிதழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைப் போரின்போது காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் கதி என்ன என்பதை கண்டறியும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள முகாம்களுக்குள் மனிதநேய அமைப்புகள் நுழையத் தடை விதித்திருப்பதால் அவர்களின் பணி மிகவும் சிக்கலாகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூறியதாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


[படம்: த ரைம்ஸ்]

பிற்குறிப்பு - 2

அம்பலப்படுத்தியது எப்படி?

போர் நடைபெற்ற பகுதிகளுக்குள் நடுநிலையான பார்வையாளர்கள் நுழைய சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், இலங்கை இனப்படுகொலை குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது எப்படி என்பதையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் விளக்கியுள்ளது.

போர்ப் பகுதிக்குள் நடுநிலையான பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்றபோது, அவரின் உலங்குவானூர்தியில் 'த ரைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர்கள் சிலரும் சென்றனர். அவர்கள் வானில்
பறந்தபடியே பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் படம் பிடித்தனர்.

இவ்வாறு செய்த ஒரே பிரித்தானிய நாளிதழ் 'த ரைம்ஸ்' மட்டும்தான். அது மட்டுமின்றி உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் பாம் முகாமுக்கு 'த ரைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர்கள் இரண்டு தடவை சென்றனர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தங்களின் வேதனையை கண்ணீர் வாக்குமூலமாக தெரிவித்தனர் என்று 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்களைக் கொண்டே இந்த செய்திக் கட்டுரை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் கூறியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சீனாவின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது. சீனாவின் முழு ஆதரவும் சிறிலங்காவுக்கு இருப்பதால் சிறிலங்கா மீது போர்க் குற்ற வழக்குத் தொடவோ விசாரணை நடத்தவோ வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

எனினும் போரின்போது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக சிறிலங்காப் படை உயரதிகாரிகள் மீது அனைத்துலக போர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது.

Related article: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6391265.ece

ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை

"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது.

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம்தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றிவிட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சாசௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகிவிட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி. காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் துணையுடன் இந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் மீது ஜாதி சீக்கியர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஞானி ஜெயில்சிங் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர் எவரும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை.

சமீபகாலமாக காங்கிரஸ் தனது அரசியல் எதிரியான அகாலிதளத்தை வீழ்த்த இந்த தேரா அமைப்புகளைத் தூண்டி விடுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆளும் அகாலிதளத்தின் ஆதரவுடன் எஸ்.ஜி.பி.சி. இந்தத் தேரா அமைப்புகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கிவிடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீற்றர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 6, 2009

தோகை இளமயில்…

I like this song for its lyric and usage of words… Its brilliantly done by Ilayaraja, SP BalaSubramaniyam and Vairamuthu pair. Excellent work.

In Tamil…

தோகை இளமயில் (பயணங்கள் முடிவதில்லை)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
(தோகை)

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
(தோகை)

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
(தோகை) .........

In English

thoagai ilamayil aadi varugudhu vaanil mazhai varumoa
koadhai ival vizhi nooru kavidhaigal naalum ezhudhidumoa
thaen sindhum naeram naan paadum raagam
kaatroadu kalyaanam seyginradhoa
(thoagai)

koalam poadum naanangal kaanaadha jaalam
idhazhgalilae pournami velichcham
kannil thullum thalangal aanandha meaelam
imaip paravai siragugal asaikkum
vizhigalilae kaadhal vizhaa nadaththugiraal saakunthalaa
annamum ivalidam nadai pazhagum
ival nadai asaivinil sangeetham undaagum
(thoagai)

bhoomi engum poondhoattam naan kaana vaendum
pudhuth thenralum pookkalil vasikkum
aagaaya maegangal neerootra vaendum
andha mazhaiyil malargalum kulikkum
aruvigaloa raagam tharum adhil nanaindhaaldhraagam varum
dhaevadhai vizhiyilae amudha alai
kanavugal valarththidum kalloorum un paarvai

Hear the song from youtube:

Also you can listen songs from: http://beta.musicmazaa.com/tamil/audiosongs/movie/Payanangal+Mudivathilai.html
  

, பயணங்கள் முடிவதில்லை