Saturday, May 30, 2009

More thoughts….இந்தியாவுக்காகப் போரிட்டோம்- இராஜபக்ஷே?

After reading this இந்தியாவுக்காகப் போரிட்டோம்- ராஜபட்ச, certainly it takes me the following conclusion… sorry, i was pushed too :)

I was thinking in many ways like this (again pushed too)…

1) இந்தியாவுக்காக போரிட்டோம் தமிழக தலைவர்கள் வாழ்த்தினார்கள் என்பது ராஜபக்சே சொல்லித்தான் யாருக்காவது தெரியவேண்டுமென்றால் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். நடக்கிற விடயங்களை வைத்து ஐந்து வயது குழந்தை கூட இதைச் சொல்லும்

2) படிபறிவு இல்லாத ஜென்மங்கள் புலம்புவதையெல்லாம் பெரிதுபடுத்த கூடாது. சிங்கள ராணுவம் அடிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல் வந்து நின்றது எங்கள் தமிழ்நாட்டில்தான் என்பதை சுலபமாக மறந்துவிட்டார். இந்தியர்களை பொறுத்தவரைக்கும் இலங்கை பிரச்சினை என்பது நன்றி கெட்ட நயவஞ்சகர்களால், பயங்கரவாதிகளால் எங்கள் சொந்த மண்ணில் நடந்த ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு முன், படுகொலைக்கு பின் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறோம்.தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக நாம் நடத்திய போராட்டங்களுக்கு நன்றி காட்டும் லட்சனம் இதுதானா?

3) இந்தியாவின் சார்பாகப் போரிட்டோம் என்று சொல்வதை விட எங்கள் சார்பாகப் போரிட்டு இனப் படுகொலைகளைச் சரியாகச் செய்து முடித்த காங்.அரசிற்கு நன்றி!
எஙகளைப் பழி பாவத்தில் இருந்து காப்பாற்றி ஐநா மன்றத்தில் எங்களுக்காகக் குரல் கொடுத்து உத்தமப் பட்டம் வாங்கித் தந்த சோனியா அரசிற்கு நன்றி!
இரு நாட்டு அதிகாரியாய் நடந்து எங்களை வழிநடத்தி முழுமையான சிங்கள நாடாக மாற்றித் தந்துள்ள நாராயணன், மேனன் முதலான அதிகாரிகளுக்கு நன்றி!
எங்களிடம் வாங்கிய செல்வத்திற்கு வஞ்சமில்லாமல் எங்களின் தூதர்களாக விளங்கிய இராம், சோ, சு.சா. முதலான கும்பல்களுக்கு நன்றி! இனி நான் / நாங்கள் யார் என்பதைக் காட்டப் போகும் வரை பொறுமை காக்கும் அனைவருக்கும் நன்றி என்றல்லவா சொல்ல வேண்டும். இதில் ஏன் அப்பாவி இந்திய மக்களையும் தமிழக மக்களையும் கூட்டாளி ஆக்குகின்றார். நம் மண்ணில் நாமே மண்ணை வாரிக் கொண்டாற் போல் பகைவர்களிடம் ஆளும் பொறுப்பை ஒப்படைத்தோம் அல்லவா? அதுதான் கொக்கரிக்கிறார். காலம ஒரு நாள் மாறும்! அறம் வெல்லும்!

4) தமிழ் ஈழத்திலிருந்து வரும் செய்திகள், படங்கள், இராஜபக்ஷே எவ்வளவு கொடூரமான முறையில் தமிழர்களை கொன்று குவித்திருக்கிறான் என்பதை காட்டுகின்றது. இதைப் பார்க்கும் ஒவ்வொரு தமிழ் இரத்தம் ஓடும் தமிழனின் இதயத்திலும் இரத்தம் கசிந்துக்கொணடிருக்கிறது. தமிழன் எந்த இந்தியாவை தனது தாயகம் என எண்ணியிருந்தானோ அந்த இந்தியா இந்தக் கொடிய செயலுக்கு உதவியதோடு மட்டும் நிற்காமல் இன்னும் கொடியவன் இராஜபக்ஷேவிற்கு தொடர்ந்து உதவுவதை நினைத்து வேதனையில் வாடி தனது இனம் இன்று உலக அரங்கில் அனாதையாக, அகதிகளாக, ஆதரவற்றவர்களாக, நாதியற்றவர்களாக, நாடற்றவர்களாக அலையும் நிலையை எண்ணி எண்ணி ஏங்கி தவிக்கிறான். இந்த நிலையிலும் தமிழர்களின் போலி தமிழின தலைவர்களது துரோகம் தொடர்வதையும் எண்ணி வேதனையில் வாடுகிறான். இதற்கு முடிவு ஏற்பட தமிழினம் தடைகளை தகர்ந்தெறிய முயலவேண்டும். தோல்வியே வெற்றியின் படி என்பதை உணர்ந்து வீறுகொண்டு எழுந்தால் இறுதி வெற்றி தமிழினத்திற்கே.

5) விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை ..../ இது உண்மைதான். ஆனால் ஈழ மக்களுக்கு தமிழகம் எப்போதும் ஆதரவாக இருக்கும். புலி வேறு, ஈழ மக்கள் வேறு. இதை ஈழ-புலிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனல் அதுதான் உண்மை. புலிகள் செய்த வன்முறையால் தமிழகம் பிரம்மித்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் குளம்பி இருந்தது. இப்போது புலிகள் இல்லாததால் தமிழகத்தில் ஈழ எதிர்ப்பு இருக்காது. வை.கோ, நெடுமாறன்.. போன்றோர் புலிகளை முன்வைத்து ஈழ பிரச்சினையை அனுகாமல் ஈழ மக்களுக்காக அனுகினால் ஈழம் மலரும். மேற்க்கதிய நாடுகலில் ஈழம் குறித்து ஒரு விழிப்பு உணர்வு வந்துள்ளது. இந்த ராஜபக்சே என்ன குதித்தாலும் மேற்க்கு நாடுகள் இவரை சும்மா விடபோவது இல்லை. ரஜபக்சே உலக கோர்ட்டில் தமிழர்களை 'Ethnic cleansing ' செய்தார் என குற்றம் சாட்டப்படுவார். அப்போது இந்த சுண்டைகாய் சீரீ லங்கா சும்மா வயை மூடிக்கொண்டு இருக்கும் வேரேதும் செய்ய முடியாது. இந்த நல்ல சந்தர்ப்பத்தை ஈழ தமிழர்கள் மறுபடியும் கோஸ்ட்டி சண்டை போட்டு கெடுதுக்கொள்ளக்கூடாது. தமிழகத்தில் தமிழின உணர்வு உள்ள ஒரு தலைவர் வர வேண்டும். வருவாரா…

6) ராஜபட்சயை பாராட்டிது வேறு யார் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட போது அதைத் தடுக்க நாதியற்ற தமிழின துரோகிகள்.

I always believe on onething…

சூரியனை பார்த்து நாய்கள் ஊளையிடுகிறது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”

No comments:

Post a Comment