Saturday, January 23, 2010

பொக்கிஷம் - திரை விமர்சனம்

இப்போது தான் இந்த படம் பார்த்தேன். என் விமர்சனம் இதோ.

இன்டர்நெட் மற்றும் கைத் தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் கடிதங்களுக்கு அதிக முக்கியத்துவமும், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலும் படமாக்கி உள்ளார் சேரன்.

இந்தப் படத்தில் மீண்டும் சேரனுடன் இணைந்துள்ளார் பத்மப்ரியா. இவருடன் பெங்காலி நடிகை ரூமி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

[00actress-padmapriya-pokkisham-movie-stills-6.jpg]

நேமிச்சந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சபேஷ் முரளி இசையமைத்து உள்ளனர்.

[actress-padmapriya-pokkisham-movie-stills-18.jpg]

மனதில் எப்போதும் பொக்கிஷமாய் தங்கிவிடும் சில இனிய நினைவுகளின் தொகுப்பே இந்த பொக்கிஷம் என்கிறார் சேரன்.


இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கும் என்பதில் ஐயம் இல்லை.

காதலர்களுக்கு ஏற்ற படம்.  குடும்பத்துடன் படம் பார்க்கலாம்,  முகம் சுளிக்காமல் படம் உள்ளது.

சபாஷ் சேரன் உங்கள் முயற்சிக்கு!! வளர்க மேன்மேலும்.

அன்பர்களே, இது போன்ற நல்ல படங்களை திரையரங்கதிற்கு சென்று பாருங்கள்!!

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று மழை - பாடல்


நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல் நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்
தேவதை  அன்னம்  பட்டாம்பூச்சி
கொஞ்சும்  தமிழ்  குழந்தை
சினுங்கள்  சிரிப்பு  முத்தம்
மௌனம்  கனவு  ஏக்கம்
மேகம்  மின்னல்  ஓவியம்
செல்லம்  ப்ரியம்  இம்சை
இதில்  யாவுமே  நீதான்  எனினும்
உயிர்  என்றே  உனை  சொல்வேனே
நான்  உன்னிடம்  உயிர்  நீ  என்னிடம்
நாம்  என்பதே  இனிமேல்  மெய்  சுகம்
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்



அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
அன்புள்ள ஒளியே  அன்புள்ள  தமிழே
அன்புள்ள  செய்யுளே  அன்புள்ள  இலக்கணமே
அன்புள்ள  திருக்குறளே  அன்புள்ள  நற்றினையே
அன்புள்ள  படவா  அன்புள்ள  திருடா
அன்புள்ள  ரசிகா அன்புள்ள  கிருக்கா
அன்புள்ள  திமிரே அன்புள்ள  தவறே
அன்புள்ள  உயிரே  அன்புள்ள  அன்பே
இதில்  யாவுமே  இங்கு  நீதான்  என்றால்
என்னதான் சொல்ல சொல்  நீயே
பேரன்பிலே ஒன்று  நாம்  சேர்ந்திட
வீண் வார்த்தைகள்  இனி  ஏன்  தேடிட

நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே

என்ன அருமையான பாடல் வரிகள், அர்த்தங்கள், சந்தங்கள்... அருமை!! 
தமிழுக்கும் அமுதென்று பெயர்!! அது என்றுமே உண்மை தான்.

Friday, January 22, 2010

Video : Imagining India By Nandan Nilkeni

செ‌ன்னை நக‌ரி‌ன் அ‌ரிய புகைப்படங்கள்



Fore more information, you can get more pics from: http://chennai-latestupdate.blogspot.com/2008/08/chennai-picture-gallerychennai-rare-old.html

பெ‌ங்களூர் லா‌ல்பா‌க் - 2010 மல‌ர் க‌ண்கா‌ட்‌சி

சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை வெகுவாக‌க் கவரு‌ம் மல‌ர் க‌ண்கா‌ட்‌சி லா‌ல் பா‌க் தோ‌ட்ட‌த்‌தி‌ல் நே‌ற்று‌த் துவ‌ங்‌கியது.
பெ‌ங்களூ‌ரி‌ல் உ‌ள்ள லா‌ல்பா‌க் தோ‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌ண்டு தோறு‌ம் மல‌ர் க‌ண்கா‌ட்‌சி நட‌த்த‌ப்படுவது வழ‌க்க‌ம்.

ஆ‌ண்டு தோறு‌ம் ஜனவ‌ரி மாத‌த்‌தி‌ல், துவ‌ங்கு‌ம் இ‌ந்த மல‌ர் க‌ண்கா‌ட்‌சி நே‌ற்று‌த் துவ‌ங்‌கியது. வ‌ண்ண வ‌ண்ண மல‌ர்களுட‌ன் பூ‌த்து‌க் குல‌ங்கு‌ம் இ‌ந்த மல‌ர் க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல், மல‌ர்களை‌க் கொ‌ண்டு ‌வித‌விதமான வடிவ‌ங்க‌ள் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.


இ‌ன்னு‌ம் ஒரு வார காலமே இரு‌க்கு‌ம் இ‌ந்த மல‌ர் க‌ண்கா‌ட்‌சியை‌க் காண ஏராளமான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் லா‌ல் பா‌க் தோ‌ட்ட‌த்‌தி‌ற்கு வ‌ந்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன‌ர். ரோஜா‌க்களை‌க் கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அழ‌கிய உருளைக‌ள், கோபுர‌ங்க‌ள், உ‌யி‌ரின வடிவ‌ங்க‌ள் என லா‌ல் பா‌க் முழுவது‌ம் க‌ண்க‌ளை‌ப் ப‌ரி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளன. அ‌தி‌ல் பல வ‌ண்ண மல‌ர்களை‌க் கொ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட குது‌ப்‌‌மினா‌ர் கோபுர‌ம் பா‌ர்வையாள‌ர்களை வெகுவாக‌க் கவ‌ர்‌ந்து வரு‌கிறது.

சத்யம் ராஜாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

Ramalinga Rajuதகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியையே உண்டாக்கியவர் ராமலிங்க ராஜு. சத்யம் என்ற நிறுவனத்தை சர்வ சாதாரணமாகத் துவங்கிய ராஜு, மிகக் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் 'ப்ளூ சிப்' நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். மிகச் சில வருடங்களில் 2 பில்லியன் டாலர் நிறுவனமாக சத்யம் உருவானது ராஜுவின் அபார திறமையால்தான். சொல்லப் போனால் அவருக்கு நிகரான ஒரு கார்ப்பரேட் நிர்வாகியே இல்லை என்கிறார்கள்.

ராஜுவின் குடும்பத் தொழில் ரியல் எஸ்டேட் தான். அதனால்தான் சத்யம் என்ற ஐடி நிறுவனத்தைத் துவங்கிய பிறகு அவர் மேடாஸ் இன்ப்ரா என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் துவங்கினார். சத்யம் நிறுவனத்தின் நிதியை இந்த மேடாஸுக்கு அவ்வப்போது மாற்றினார்.
இன்னொரு பக்கம் சத்யம் நிறுவனப் பங்குகளின் விலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, இல்லாத லாபத்தை உருவாக்கிக் காட்டினார்.

2008ம் ஆண்டில் உலகம் முழுக்க ஐ.டி நிறுவனங்கள் பெரிதாக அடிவாங்க, அந்த நேரத்திலும் போலி லாபம் காட்டவும், சத்யம் நிறுவன பணத்தை மேடாஸுக்கு மாற்றவும் அவர் முயன்ற போதுதான் மாட்டிக் கொண்டார். அதுவரை அவரைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுதி பெரும் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மீடியா, அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து அந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கியது.
பின்னர் எத்தனையோ கதைகள்... ஆதாரங்கள் ராஜுவைப் பற்றியும், ராஜுவுக்கு எதிராகவும்...
ஆனால்- இவற்றுக்கெல்லாம் அப்பால், 5 கண்டங்களில் 66 நாடுகளில் சத்யம் என்ற ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ராஜு உருவாக்கியிருந்த விதம், அதில் அவர் காட்டிய முனைப்பும் வேகமும் ஒவ்வொரு தொழிலதிபரும், இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம்.
அவரது மேடாஸ் நிறுவனம் நிறுவனம் பற்றி பல்வேறு மாறுபட்ட செய்திகள் உலா வந்தாலும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அந்த நிறுவனம் வென்ற விதம் வளரும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

ராஜு பெற்ற அபார வெற்றியின் பின்னணி... அவரது வீழ்ச்சிக்கான காரணங்கள்... நிறுவனச் சட்டங்களை அவர் தனக்கு சாதகமாக வளைத்த விதம், நிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள் கண்களை மறைத்து அவர் செய்த பிஸினஸ் ஜாலங்கள்... இவை அனைத்தையும் இப்போது 'The Double Life Of Ramalinga Raju!' என்று ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் கிங்ஷக் நாக். இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ரெஸிடென்ட் எடிட்டர் ஆவார். ராஜூவைப் பற்றி இதுவரை மீடியாவில் வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கலக்கலாய் எழுதியிருக்கிறார் நாக்.

முழுசாகப் படிக்க இந்த புத்தகம் ஆன்லைனிலும் விலைக்குக் கிடைக்கிறது. Buy The Double Life Of Ramalinga Raju