Sunday, August 14, 2011

தமிழ்நாடு நிலஅதிர்வும், புலம்பல்களும்…

தமிழகத்தில் ஆகஸ்ட் 12,2011 காலை திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.

 

 

இது பற்றி சில புலம்பல்கள்…

 

அதிமுக: திருட்டு முன்னேட்ற்ற கழகம் அடித்த, செய்த பாவம் தமிழக மக்களை தாக்க ஆரம்பித்து விட்டது...

 

திமுக: கலைஞர் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது. ஏழைகள் பசியாற உண்டார்கள். நாடு சுபிட்ஷமாக இருந்தது. ஆனால் இப்போது? விலைவாசி வானத்துடன் போட்டி போட்டுகொண்டு பறந்து கொண்டிருக்கிறது. பஸ் கட்டணம் கண்ணை கட்டுது. தாலிக்கு மட்டுமே வாங்கி கொண்டிருந்த தங்கம், இந்த புன்னியவதியில் ஆட்சியில் அருங்காட்சியஹங்களில் மட்டும் பார்க்க முடியும் போல் இருக்கிறது. கொலை, கொள்ளையை தடுக்க போலிசே இல்லை. ஆனால், பொய் கேஸ் போட்டு அநியாயம் செய்து, தன்மானம் இழந்து கிடக்கிறது. ஒரு ரூபாய் நல்ல அரிசியை பார்த்தவர்கள், புழு பூச்சி இருக்கும் அரிசியை வாங்கி, தின்று வாந்தி பேதி எடுத்து கிடக்கிறார்கள். பெங்களூர் கோர்ட்டு வா வா என்கிறது. தமிழ்நாடோ போ போ என்கிறது. ஆனால் ஆணவம் பிடித்து, சட்டசபை மாண்பை கெடுத்து, மக்கள் கடமையாற்ற கூடிய சபையை, ரெகார்ட் டான்ஸ் லெவெலுக்கு, நாலாந்தர (ஷகிலா) பட ரேஞ்சுக்கு கொண்டுவந்து, நாட்டை பற்றி கவலை இல்லாமல், மக்களை பற்றி கவலை இல்லாமல், அடிமைகள் கூட்டத்தை வைத்து, புகழ சொல்லி, தன்னிலை மறந்து கிடக்கிறார் கோமளவல்லி...

 

மக்கள்: வெள்ளைக்காரி சோனியாவினால் இந்தியா நாசமாகி கொண்டிருக்கிறது. கொள்ளைக்காரி ஜெயாவினால் தமிழ்நாடு தரைமட்டமாகி கொண்டிருக்கிறது. போதா குறைக்கு பூகம்பம், சுனாமி வேற இவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பயமுறுத்தி கொண்டிருக்கிறது. ஏன் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கைக்கு சீற்றம்? Ok, Jokes apart!!

 

 

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று. அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும். மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல்

 

பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.  சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும். ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது.

 

மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா? ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

 

சுற்றியும் மலைகளால் சூழ்ந்த பகுதி சேலம் .. சேலத்திலேயே நிலநடுக்கமா... மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்களே..அதை மீறியும் நிலா நடுக்கமா? இருக்கிற மலைய பூரா உடைச்சு granite ஸ்லாப் ஆக்கி வெளிநாட்டிற்கு விற்று கோடி கோடியா சம்பாதிக்கும் பண முதலைகளை ஒழித்து மலைகளை காப்பாற்றினால்தான் பூகம்பத்திலிருந்து தப்பிக்க முடியும் ,,,மக்கள் அனைவரும் புரிந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால்தான் இது நடக்கும்,,அன்னை பூமியை காப்பாற்ற ஒன்று படுவோம் ,,,அமெரிக்காவில் பலபல மடங்கு மலைகள் இருந்தாலும் ஒரு மலை கூட உடை படவில்லை,,இயற்கையை காப்பாற்றி வருகிறார்கள்… பேராசை ஒழித்தால்தான் மரங்களை காப்பாற்றி மழை பெற முடியும்,,மக்களே சிந்தியுங்கள்.

 

இயற்கையிலிருந்து நாம் விலகி இருக்கிறோம் என்பதையே இயற்கை சீற்றங்களான நில அதிர்வு, சுனாமி, வெள்ளம், புயல் ஆகியவை தெரிவிக்கின்றன. ஆத்து மண்ண அள்ளாதீங்க நா யாரு கேக்குறா , இப்போ குய்யோ முய்யோ நு கத்தினா என்ன பண்ண. இது முடிவல்ல ஆரம்பம் ,,,நம் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வரை…

No comments:

Post a Comment