Wednesday, August 24, 2011

அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை

100 நாட்களில் என்னங்க செய்திட முடியும். வெறும் நல திட்டங்கள் அறிவிப்பு தானே வந்திருக்கு. அது செயல்படுத்த பட்ட பின்னர் சாதனைக்கு மார்க் போடலாம்.அர்ரெஸ்ட் ம நடந்திருக்கு அது வரவேற்க தக்க ஒன்று. சமசீர் கல்வியில் ஜெயா பெயில் ஆகி விட்டார். இலவசங்கள் கொடுத்து தமிழக மக்களை மீண்டும் சோம்பேறி ஆக்குவதால் பலன் இல்லை. ஜெயா பேர் சொல்லும் அளவுக்கு தமிழக மக்களுக்கு நீண்ட நாள் பயன்படும் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து அதில் பல் ஆயிரம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பல ஆயிரம் குடும்பங்கள் பட்டினி இல்லாமல் வாழும் பொது தான் ஜெயா 100 மார்க் வாங்குவார். இலவசங்கள் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நல்ல ஆட்சி கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்கள் கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பலி வாங்கும் படலத்தை கொஞ்ச நாள் தள்ளி போட்டு பலன் தரும் திட்டங்களை செயல்படுத்த துவங்குங்கள் அறிவிப்போடு நிற்க வேண்டாம்.

 

பொதுவாக நுறு நாட்களில் ஒரு அரசின் திறனை எடை போடுவது கடினம்..... ஆனால் ஜெயலலிதா அதை எளிது படித்தி இருக்கிறார்....சமச்சீர் கல்வி....ஜெயலலிதா எடுத்த் முடிவுகள் அனைத்தும் ஒரு நல்ல அரசுக்கான எந்த திறனை வெளிபடுத்தவில்லை....சமசீர் கல்வியில் வரட்டு பிடிவாதத்தால் கிட்டத்தட்ட் 65 நாட்கள் பிள்ளைகள் படிக்க புத்தகம் இல்லாமால் இருந்தது இந்த 100 நாளில் ஒரு சறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்....அடுத்து இதே மாதரியான பிழை புதிய சட்டசபைக்கு போக மறுத்ததிலும் தொடர்ந்தது......அடுத்து ஆட்சிய எப்பிடி திறன்பட செயல்படுத்த வேண்டும் என்பதை மறந்து முழு கவனமும் திமுகவை எப்பிடி எந்த பிரச்னையில் சிக்க வைப்பது என்பதில் அதிக நேரம் விரயமாகபட்டு உள்ளது....அடுத்து மத்திய திட்ட குழு நீதி கேக்கும் போது...அது சாத்தியமா என்று யோசிக்காமல் இரண்டு லட்சம் கோடி நிதி கேட்டது...அதாவது இந்திய பட்ஜெட்டில் இருபது சதவிதம் நிதி கேட்டது.....தேவையான நிதி பெறுவதில் சாமர்த்தியாமாக செயல்படவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது..... அடுத்து பெரும்பாலான மந்திரிகள் அவர்கள் துறை சமந்தப்பட்ட அடிப்படை கூட தெரியாமல் இருப்பது அடுத்த பின்னடைவு....அடுத்து இலவச அறிவிப்புகள்..... இதுவரை இலவசமா....மக்களை சோம்பேறி ஆக்க பாக்கிரிய?...என்று கூக்குரல் விட்டவர்கள்.....இன்றைக்கு அதே ஜெயலலிதா செய்கிறார் என்றவுடன்.....ஆகோ ஓகோ என்று மெய் சிலிக்கிரார்கள்..... இலவசத்தை பொறுத்தவரை சென்ற திமுக அரசின் செயல்களும் தவறு..... ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் அதையும் மிஞ்சுகிறார்...இன்றைய உலக பொருளாதாரம் விழுந்து கிடிக்கிறது.....அதை பற்றி ஒன்றும் கவலைபடமால் இலவச அறிவிப்புகள்.....குறிப்பாக இந்த லேப்டாப் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட் 3400 கோடி வேண்டும்.....இது தேவையா....ஆனால் ஒரு விசயத்தில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.....இலவச அறிவுப்புக்காக பட்ஜெட்க்கு முன்பே 5000 கோடிக்கு மேல் வரி ஏற்றபட்டது உள்ளது..... அதாவது மக்களிடமே பணம் வங்கி அதை மக்களிடம் இலவசம் என்ற பெயரில் தருவது ஒரு வித திறமைதான்......ஆக மொத்தத்தில் இந்த அரசு இந்த 100 நாட்களில் எதிபார்ப்பை பூர்த்தி செய்தாதோ இல்லியோ....நிறைய மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது....

 

ஆரம்பமே சூப்பர்...பதவி ஏற்க வந்த அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்..அம்மரண பழியை நேருமீது போட முயற்சித்து அதில் தோல்வி...அடுத்து சமசீர் கல்வி க்கு எதிராக அரசு உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் என முயற்சித்து அதிலும் தோல்வி...மக்கள் மீது பட்ஜெட்டுக்கு முன்னரே வரிவிதித்து ஜனநாயகத்துக்கு ஒரு குத்து...நில அபகரிப்பு என்று சொல்லி திமுகவினர்மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட அராஜகம்..... தி.நகரில் ஆளும் கட்சி எம்.எல் ஏ காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கெ கைது செய்து வைக்கப்பட்டிருந்த தனது கட்சியினரை மீட்டு வெளியே கொண்டு வந்ததோடு மட்டுமல்ல..அந்த காவல்துறை அதிகாரியையும் இடமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய கதை...பலகோடி செலவில் கட்டப்பட்ட செயலகத்தில் பணி செய்யாமல் பூட்டி வைத்துவிட்டு வாடகை கொடுத்து பழைய கட்டிடத்தில் செயல் படும் கொடுமை...பணவிரயம்...ஒரு புதிய மின்திட்டம் கூட இதுவரை அறிவிக்காமல் கலைஞர் துவங்கிய திட்டங்களை மட்டுமே சார்ந்து நிற்கும் கேவலம்...எல்லாவற்றிற்கும் மேலாக முட்டாள்களின் மாதமான (ஏப்ரல் பூல்) ஏப்ரலில் புது வருடம் பிறக்கும் என அறிவித்து முட்டாள்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது .... இவைகள்தான் இந்த அரசின் நூறு நாள் பெருமைகள்...

 

ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மீது வரி விதித்து விலை உயர்த்திய பெருமை இந்த அரசையே சாரும்...தலைமை செயலகம் கட்டிடம் தரமற்றது என கூறிவிட்டு இப்போது அதை மருத்துவமனையாக பயன் படுத்தப்போவதாக கூறி அந்தர் பல்டி அடித்ததும் இந்த அரசே.... கருத்து சொல்லும் அளவு எந்த முன்னேற்றமும் இல்லை, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள், சமசீர் சறுக்கல்கள், இலங்கை தமிழர் நிலையில் இரண்டும் கெட்டான் நிலைப்பாடு, தலைமை செயலக முடிவில் தனிநபர் விமர்சனம்... ஒரே ஆறுதல் சட்டம் ஒழுங்கு…

 

அரசியல் பள்ளிகூடத்தில் முதல் நான்கு ஆண்டுகள் எப்படி படித்தாலும் பாஸ் தான் ! அது வரை அவர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் சொல்லி அவர்களே மார்க் போட்டுகொல்வதால் எப்பவுமே நூற்றுக்கு நூறுதான் ! ஐந்தாம் அந்து பொது தேர்வில் வாங்கும் மார்க் தான் பாசா பெயிலா என்பதை நிர்ணயிக்கும் ! நடுவில் ஒழுக்க குறைபாட்டால் அல்லது பழைய தவறுக்கு டிஸ்மிஸ் ஆகாமல் இருந்தால் !

No comments:

Post a Comment