Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Wednesday, August 24, 2011

அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை

100 நாட்களில் என்னங்க செய்திட முடியும். வெறும் நல திட்டங்கள் அறிவிப்பு தானே வந்திருக்கு. அது செயல்படுத்த பட்ட பின்னர் சாதனைக்கு மார்க் போடலாம்.அர்ரெஸ்ட் ம நடந்திருக்கு அது வரவேற்க தக்க ஒன்று. சமசீர் கல்வியில் ஜெயா பெயில் ஆகி விட்டார். இலவசங்கள் கொடுத்து தமிழக மக்களை மீண்டும் சோம்பேறி ஆக்குவதால் பலன் இல்லை. ஜெயா பேர் சொல்லும் அளவுக்கு தமிழக மக்களுக்கு நீண்ட நாள் பயன்படும் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து அதில் பல் ஆயிரம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பல ஆயிரம் குடும்பங்கள் பட்டினி இல்லாமல் வாழும் பொது தான் ஜெயா 100 மார்க் வாங்குவார். இலவசங்கள் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நல்ல ஆட்சி கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்கள் கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பலி வாங்கும் படலத்தை கொஞ்ச நாள் தள்ளி போட்டு பலன் தரும் திட்டங்களை செயல்படுத்த துவங்குங்கள் அறிவிப்போடு நிற்க வேண்டாம்.

 

பொதுவாக நுறு நாட்களில் ஒரு அரசின் திறனை எடை போடுவது கடினம்..... ஆனால் ஜெயலலிதா அதை எளிது படித்தி இருக்கிறார்....சமச்சீர் கல்வி....ஜெயலலிதா எடுத்த் முடிவுகள் அனைத்தும் ஒரு நல்ல அரசுக்கான எந்த திறனை வெளிபடுத்தவில்லை....சமசீர் கல்வியில் வரட்டு பிடிவாதத்தால் கிட்டத்தட்ட் 65 நாட்கள் பிள்ளைகள் படிக்க புத்தகம் இல்லாமால் இருந்தது இந்த 100 நாளில் ஒரு சறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்....அடுத்து இதே மாதரியான பிழை புதிய சட்டசபைக்கு போக மறுத்ததிலும் தொடர்ந்தது......அடுத்து ஆட்சிய எப்பிடி திறன்பட செயல்படுத்த வேண்டும் என்பதை மறந்து முழு கவனமும் திமுகவை எப்பிடி எந்த பிரச்னையில் சிக்க வைப்பது என்பதில் அதிக நேரம் விரயமாகபட்டு உள்ளது....அடுத்து மத்திய திட்ட குழு நீதி கேக்கும் போது...அது சாத்தியமா என்று யோசிக்காமல் இரண்டு லட்சம் கோடி நிதி கேட்டது...அதாவது இந்திய பட்ஜெட்டில் இருபது சதவிதம் நிதி கேட்டது.....தேவையான நிதி பெறுவதில் சாமர்த்தியாமாக செயல்படவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது..... அடுத்து பெரும்பாலான மந்திரிகள் அவர்கள் துறை சமந்தப்பட்ட அடிப்படை கூட தெரியாமல் இருப்பது அடுத்த பின்னடைவு....அடுத்து இலவச அறிவிப்புகள்..... இதுவரை இலவசமா....மக்களை சோம்பேறி ஆக்க பாக்கிரிய?...என்று கூக்குரல் விட்டவர்கள்.....இன்றைக்கு அதே ஜெயலலிதா செய்கிறார் என்றவுடன்.....ஆகோ ஓகோ என்று மெய் சிலிக்கிரார்கள்..... இலவசத்தை பொறுத்தவரை சென்ற திமுக அரசின் செயல்களும் தவறு..... ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் அதையும் மிஞ்சுகிறார்...இன்றைய உலக பொருளாதாரம் விழுந்து கிடிக்கிறது.....அதை பற்றி ஒன்றும் கவலைபடமால் இலவச அறிவிப்புகள்.....குறிப்பாக இந்த லேப்டாப் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட் 3400 கோடி வேண்டும்.....இது தேவையா....ஆனால் ஒரு விசயத்தில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.....இலவச அறிவுப்புக்காக பட்ஜெட்க்கு முன்பே 5000 கோடிக்கு மேல் வரி ஏற்றபட்டது உள்ளது..... அதாவது மக்களிடமே பணம் வங்கி அதை மக்களிடம் இலவசம் என்ற பெயரில் தருவது ஒரு வித திறமைதான்......ஆக மொத்தத்தில் இந்த அரசு இந்த 100 நாட்களில் எதிபார்ப்பை பூர்த்தி செய்தாதோ இல்லியோ....நிறைய மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது....

 

ஆரம்பமே சூப்பர்...பதவி ஏற்க வந்த அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்..அம்மரண பழியை நேருமீது போட முயற்சித்து அதில் தோல்வி...அடுத்து சமசீர் கல்வி க்கு எதிராக அரசு உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் என முயற்சித்து அதிலும் தோல்வி...மக்கள் மீது பட்ஜெட்டுக்கு முன்னரே வரிவிதித்து ஜனநாயகத்துக்கு ஒரு குத்து...நில அபகரிப்பு என்று சொல்லி திமுகவினர்மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட அராஜகம்..... தி.நகரில் ஆளும் கட்சி எம்.எல் ஏ காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கெ கைது செய்து வைக்கப்பட்டிருந்த தனது கட்சியினரை மீட்டு வெளியே கொண்டு வந்ததோடு மட்டுமல்ல..அந்த காவல்துறை அதிகாரியையும் இடமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய கதை...பலகோடி செலவில் கட்டப்பட்ட செயலகத்தில் பணி செய்யாமல் பூட்டி வைத்துவிட்டு வாடகை கொடுத்து பழைய கட்டிடத்தில் செயல் படும் கொடுமை...பணவிரயம்...ஒரு புதிய மின்திட்டம் கூட இதுவரை அறிவிக்காமல் கலைஞர் துவங்கிய திட்டங்களை மட்டுமே சார்ந்து நிற்கும் கேவலம்...எல்லாவற்றிற்கும் மேலாக முட்டாள்களின் மாதமான (ஏப்ரல் பூல்) ஏப்ரலில் புது வருடம் பிறக்கும் என அறிவித்து முட்டாள்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது .... இவைகள்தான் இந்த அரசின் நூறு நாள் பெருமைகள்...

 

ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மீது வரி விதித்து விலை உயர்த்திய பெருமை இந்த அரசையே சாரும்...தலைமை செயலகம் கட்டிடம் தரமற்றது என கூறிவிட்டு இப்போது அதை மருத்துவமனையாக பயன் படுத்தப்போவதாக கூறி அந்தர் பல்டி அடித்ததும் இந்த அரசே.... கருத்து சொல்லும் அளவு எந்த முன்னேற்றமும் இல்லை, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள், சமசீர் சறுக்கல்கள், இலங்கை தமிழர் நிலையில் இரண்டும் கெட்டான் நிலைப்பாடு, தலைமை செயலக முடிவில் தனிநபர் விமர்சனம்... ஒரே ஆறுதல் சட்டம் ஒழுங்கு…

 

அரசியல் பள்ளிகூடத்தில் முதல் நான்கு ஆண்டுகள் எப்படி படித்தாலும் பாஸ் தான் ! அது வரை அவர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் சொல்லி அவர்களே மார்க் போட்டுகொல்வதால் எப்பவுமே நூற்றுக்கு நூறுதான் ! ஐந்தாம் அந்து பொது தேர்வில் வாங்கும் மார்க் தான் பாசா பெயிலா என்பதை நிர்ணயிக்கும் ! நடுவில் ஒழுக்க குறைபாட்டால் அல்லது பழைய தவறுக்கு டிஸ்மிஸ் ஆகாமல் இருந்தால் !

Saturday, June 25, 2011

நேற்றைய அரசியல்வாதிகளும் & இன்று முளைத்த காளான்களும்...

கிறுக்கி கொஞ்சம் நாள் ஆச்சூ.... சரி ஆரம்பிபோம்...

முன்பு ஜீ.வா., காமராஜர், கக்கன் அவர்கள் எளிமையாக வாழ்ந்தனர். அவர்களுக்கு மொத்தம் இரண்டு சட்டையும், இரண்டு வேஷ்டி மட்டுமே இருந்ததாம். இவர்களுக்கு பின்னால் ஒரு அரசியல்வாதியைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். நேர்மையான அரசியல்வாதிகள் எல்லா கட்சியில் இருந்தாலும், சாதிக்காகவும்,மததிற்க்காகவும்,ஒட்டு சின்னதிற்க்காகவும் வாக்களிக்கும் மக்களே குற்றவாளிகள்.ஆனாலும் இந்த தேர்தலில் இவரை வெற்றி பெறச்செய்து அந்த களங்கத்தை துடைத்ததற்க்கு நன்றி.

மூத்த குடிமக்களிடம் பேசினேன், அவர்கள் சொன்னார்கள்  தி.மு.க. தலைவர்களும் துவக்க நிலையில் இப்படித்தான் இருந்தனர். இப்போது வந்த தலை முறைதான்(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாக) எனக்குத்தெரிந்து எத்தனையோ தலைவர்கள், தமது சொந்த சொத்துக்களை விற்று கட்சி வளர்த்தனர்.மூன்றாம் வகுப்பில் இரயில் பயணம்.தொகுதிமுழுதும் காலையில் பவனி வந்து குறை கேட்ட காலம் ஒன்று. இன்றுதான், பத்து பதினைந்து அடியாட்களுடன் தொகுதியில் வலம் வருவது,கட்டை பஞ்சாயத்து, பணம் பிடுங்கிக் கழுகுகளாய் காட்சியளிக்கின்றனர். நல்ல,நேர்மையான அரசியல் வாதியை மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். அடுத்த ஐந்து ஆண்டு முழுதும் அமைதியாக அவருக்குத் தூக்கம் வரும்..ஏனெனில் வாய்தா வாங்கி, நீதி மன்றம் அலைய வேண்டிய வேலை இல்லையே...

சரி விஷயத்திற்கு வருவோம்...

சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.

அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.

ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்

இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.

"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

பொதிகை , விஜய் டிவி , ராஜ் டிவி போன்ற நடுநிலை தொலைக்காட்சி சேனல்கள் இவரைப்பற்றிய செய்தி, நேர்க்காணல் என்று பலவகையில் நேர்மைக்கு இடமுண்டு என்ற நமிபிக்கையூட்டும் பாடம் புகட்டும் நிகழ்சிகளை ஒளிபரப்ப வேண்டும். மக்கள் இவரைப்போல் உள்ளவர்களை தேடி தேர்ந்தெடுத்தல் மட்டும் போதாது. எளிமையை கற்கவும் வேண்டும். இவரைப்போல எல்லா M L A க்களும் இருந்தால் நம் நாடு முன்னேறும்.

இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவரை போல் உள்ள சிலரால் தான் அரசியல் தூய்மை படுத்தப்பட வேண்டும். மக்களின் பணத்தை கொள்ளை அடிபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் இல்லாவிட்டால் இனிவரும் காலத்தில் அவர்கள் கம்பி என்ன வேண்டியதுதான்.

Blogged using Microsoft Windows Live Writer 2011…

Saturday, May 14, 2011

திமுக, காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

குடும்ப ஆதிக்கம், அராஜகம், ஊழல் மற்றும் தாங்க முடியாத விலைவாசி என்பவற்றுக்கு அப்பால் ஈழத் தமிழர்கள் படுகொலையில் துணை நின்ற காங்கிரஸை ஆதரித்ததே தி.மு.க. செய்த மாபெரும் தவறாகும். சினிமா, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயன்ற குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது

திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான்.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.

மேலும் உட்கட்சிப் பூசல், கோஷ்டி கலவரங்கள், ஆளாளுக்கு நாட்டாமை, தங்கபாலுவின் தான்தோன்றித்தனம் ஆகியவையும் கூட காங்கிரஸுக்கு வேட்டு வைத்து விட்டது. தங்கபாலு மயிலாப்பூரில் வேட்பாளராக நிற்க செய்த தகிடுதத்தனங்களும் காங்கிரஸாரையே கடுப்பாக்கி விட்டது. இத்தனையும் சேர்ந்து இன்று காங்கிரஸை காலி செய்துள்ளது.

காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி. இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும்.

Saturday, April 23, 2011

கண்ணகி கோயில்

வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, சென்ற, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர். அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக - கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும். கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும்.

எப்படி செல்வது?

image

இந்த வருடம் என்னுடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர்.  முதலில் கம்பம் சென்று, பின்பு கூடலூர், அங்கிருந்து பளியன்குடிக்கு ஆட்டோவிலும் காலை ஐந்தரை மணிக்கு சென்றனர். ஏறுவதற்கு கடினமான மலைமீது ஏற ஆரம்பித்து, சரியாக எட்டரை மணிக்கு கோவிலை அடைந்து, சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தொட்டுணர்ந்து சிலிர்த்துப் போனார்களாம். கம்பத்திலிருக்கும் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்கள். அங்கு வரும் தமிழர்கள் கண்ணகி தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், உரிமை என்றும் பேசுவதை கேட்க முடிந்ததாம். முழுவதும் கேரளா காவல்துறையினரால் நிரம்பியிருந்த அப்பகுதியில் சொற்ப அளவில் இருந்த தமிழக காவல் துறையினரை பார்க்க முடிந்தது. அவர்களும் மக்களை ஒழுங்கு படுத்துவதை விட்டு, கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனராம். நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வயதானவர்கள் கடினமான மலையை கோலூன்றி ஏறி வந்து கண்ணகியை வழிபடுவதுதான். தமிழக அரசோ, தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பது புரிந்த பொது இதயம் வலித்தது.

இதை பற்றி எல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரமிருக்கு..? சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும், பாராட்டு விழாவில் பங்கு பெறுவுமே நேரம் பத்தாது. கண்ணகி கோயில் பற்றிய சர்ச்சை கடந்த ஐம்பது வருடங்களாக உள்ளது. இதுவரையில் யாரும் இதுபற்றி எந்த கோர்ட்டிலும் வழக்கு வில்லை. தமிழனுக்கு இது பற்றி அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பற்றி பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசோ மக்களோ கேஸ் தொடுக்கவில்லை. இது அரசியல் மட்டும். மக்களுக்கு அவசியம் இல்லை என்பதாலே. ...

சரியாகத்தான் சொன்னார்களோ, தமிழ் இனி மெல்லச்சாகும்...

தமிழகம் முழுவதும் மின்சார சப்ளை வெட்டு: சென்னையிலும் இனி ஒரு மணி நேரம் "பவர் கட்'

தமிழகத்தில் வரும் நாட்களில் மின் வெட்டை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக மின் வாரியம் கைவிரித்துள்ளது. மின் வெட்டு சரியாகி சகஜ நிலை திரும்ப சில வாரங்களாகும் என்பதால், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பகலில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி, சென்னையிலும் இதுவரை இல்லாத வகையில், இப்போது மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. தினம் ஒரு மணி நேரம் சென்னையிலும் இனி மின் வெட்டு அமலில் இருக்கும் என, மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் வினியோகம் செய்ய முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் திண்டாடி வருகிறது. இதற்கு தேவையான மின் உற்பத்தி இல்லை என கூறப்பட்டாலும், மின் உற்பத்தி நிலையங்களை சரியாக நிர்வகிக்காதது மற்றும் புதிய மின் திட்டங்களை உரிய வகையில் திட்டமிட்டு துவக்காதது போன்றவையே சரியான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியவில்லை. மின் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களித்து வந்த காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு இல்லை. பருவ நிலை மாறியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. அடுத்து வரும் மாதங்களில் நிலவும் பருவ நிலை மூலமே காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், வாக்காளர்களை மனதில் கொண்டு மின் வெட்டைக் குறைத்து அமல்படுத்தி வந்தனர். தற்போது, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வழக்கம் போல் மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமலுக்கு வருகிறது. எனவே, மின் பற்றாக்குறையை பொதுமக்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துவதாகவும் மின் வாரியம் கூறியுள்ளது.

நன்றி மின் வாரியம். சென்னை மக்களுக்கும் மின் வெட்டை பற்றி தெரியட்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடங்குளம் பவர் பிளான்ட் ஓபன் ஆனால் தான் மின் வெட்டு தீரும். இதில் இருந்து ஒன்று நன்றாக புரிகின்றது. நம் தமிழகம் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி இரவு நேரங்களில் ஒளி கொடுக்க தீ பந்தங்கள்.. காற்றுக்கு பனை விசிறி.. ஒரு இடத்துக்கு செல்ல மாட்டு வண்டி...ஹ்ம்ம்... "ஓட்டு போட்டவர்கள் இருளில்" "ஓட்டு வாங்கி ஜெயித்தவர்கள் பணச் சுருளில்" இது தான் ஜனநாயகமா?

தமிழகத்தின் தற்போது மின் தேவை 12000 மெகாவாட். ஆண்டு தோறும் மின் தேவை 1000 மெகவாட் ஆக உயந்து கொண்டே போகிறது. இதற்கு புதிய தொழில் துவங்குவது மட்டும் காரணம் இல்லை. வீடுகளில் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துகொண்டே இருக்கின்றது. மேலும் இலவசமாக மின்சாரம் பெரும் பயனாளிகள் தொகை கூடிகொண்டே செல்கின்றது. தற்போதைய மின்சாரம் 8000 மெகாவாட் அளவில் மட்டுமே வழங்கபடுகிறது. பற்றாகுறை 4000 மெகாவாட் ஈடு கட்ட அரசிடம் எந்த திட்டம் இல்லை. இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து உள்ளது. காற்றாலை மூலம் பெரும் மின்சாரம் சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். இரு திராவிட கட்சிகளும் இந்த முக்கிய கட்டமைப்பு விசயத்தில் அக்கறை காட்ட வில்லை என்பதே உண்மை. எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் மின் விசிறி ,கிரைண்டர், மற்றும் மிக்சி மூன்றும் அனைவருக்கும் இலவசமாக வழங்க தேர்தலில் அறிவிப்பு வேறு. தற்போது உள்ள நிலையில் மின் தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் ஒரு தொடர் கதையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு தமிழகத்தை தொடர்ந்து ஆண்ட இரு திராவிட கட்சிகளே!!

ஆங்கிலத்தில் ஓர் வாக்கியம் உண்டு "Everything has its own price, but the price need not be necessarily in monetary terms". இலவசத்தின் விலையில் இந்த மின் நெருக்கடியும் அடக்கம். ஓர் சென்னை வாழ் தமிழனாக இந்த அளவேனும் என் மக்களின் துயரில் பங்குக்கொள்ள முடிகிறதே என்ற நிறைவு ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வரசின் செயலற்ற முறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று சென்னையை நோக்கி நீட்டும் மற்ற தமிழரின் விரல்கள் ஓர் அபாய மணியாகவே நான் கருதுகிறேன். சென்னையில் நீ இவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறாயே என்று யாவரும் கோபப்படவில்லை என் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்கு வீண் செய்கிறாய் என்பதே இன்றைய வினா? மக்களின் மின்சார செலவு விலைவாசியப்போல் தான் உயர்வை நோக்கிப்பயணிக்கும். அதுவும் நேற்றைய கம்ப்யூட்டர் இன்று லாப்டாபகவும் நாளைய டாப்லட்டகவும் மாறும் இக்காலத்தில் இது நிச்சயம் பொருந்தும். முதலில் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தொழிற்க்கூடங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்கவேண்டும். அதே சமயத்தில் மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை செய்தல் வேண்டும்.ஓடிசாவில் உள்ளதைப்போல் மின்சாரவாரியத்தை மூன்றாக பிரித்தல் வேண்டும் "Generation, Transmission and Distribution". இந்த மூன்று பிரிவிற்குள் போட்டியை உருவாக்க வேண்டும். நிலக்கரி மற்றும் பிற raw materials வாங்குவதில் திறம்பட சுதந்திரமாக செயலாற்றும் நிர்வாகம் வேண்டும். Tender முறையை குறைந்த விலையைப்பார்த்து முடிவு செய்வதை தவிர்த்து சிறந்த சேவை மற்றும் value added services பார்த்து முடிவு செய்தல் வேண்டும். தமிழக மின்சாரத் துறைக்கு கடன் வாங்கும் அளவுகோல் நிர்ணயிக்கப்படவேண்டும். இது மட்டும் அன்றி தமிழக மக்கள் இத்துறையின் ஸ்டேக் ஹோல்டர் என்ற முறையில் மாதா மாதம் மின்சாரத் துரையின் செயல்பாடுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

நான் என்னோட நண்பன்கிட்டே பேசிக்கிட்டே இருந்தேன். அவன் சொன்னான் மச்சான் சென்னைக்கும் ஆப்பு, ஹா ஹா இதை தான் நான் எதிர்பார்த்தேன். இந்த கொடுமையை தான, மற்ற மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனுபவித்து வந்தார்கள். சொல்ல போனால், அவரவர்களுக்கு மின்சாரம் தராமல் சென்னைக்கு தந்தார்கள். வீட்டில் AirCon, Water Heaters, Electric Cookers உபயோகம் கூடி விட்டது. இதனை unit மின்சாரம் தாண்டினால், இவ்வளவு ரூபாய் கட்டணும் என்று சொல்ல மட்டும் மூளை இருக்கு, அப்போ அவ்வளவு மின்சாரம் உற்பத்தி வேண்டும் என்று புத்தி இல்லையா? Tidal Park காம், IT Park காம், கார் கம்பெனி யாம், செல் போன் கமபனி யாம் - அய்யா கருணாநிதி, இதெல்லாம் யாருக்கு பிரயோஜனம்? UPS - Generator இருக்குற வீடு, இந்த அக்னி வெயிலில் கொஞ்சம் தப்பிக்கும், ஆனால் அடி தட்டு மக்கள் என்ன செய்வார்கள்? 1760000000000 ஊழல் செய்ய முடியும், ஆனால் 1760000000000 watts மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. இதுக்கு எதுக்கு மந்திரி, அரசு? உங்கள் தொலை நோக்கு சிந்தனை யை கண்டு, மக்களுக்கு மயக்கம் வருது.

ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்களாம் - ஒரு மாசத்திற்கு 1500 கோடி - ஒரு வருடத்திற்கு 30000 கோடி ரூபாய்! இது வருடா வருடம் நடக்கும் கொள்ளைகளில் ( சென்னைக்கு தண்ணீர் விநியோகம், சாலை போடுதல், விவசாயிகள் மானியம் இதுபோல - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்! ) ஒன்று. நிரந்தர அல்லது நீண்டகால தீர்வை தராத அரசாங்கம் - தொலை நோக்கு திட்டம் இல்லாமல் அன்றாடங்காச்சியாக செயல்படுவது கேவலம். இந்த 30000 கோடி ரூபாயில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் 25 நிர்மாணம் செய்ய முடியும். பலருக்கு வேலை கிடைக்கும். அதிகப்படியான மின்னுற்பத்தியை வெளிமாநிலங்களுக்கு நல்ல காசுக்கு விற்பனை செய்யயும் முடியும். இப்படி சிந்தித்து, செயல்பட அரசுக்கு மூளை இருக்கிறதா தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இலவசமாக தரப்படும் டி.வி ( கிட்டத்தட்ட 40 மெகாவாட்), கிரைண்டர் ( கிட்டத்தட்ட 400 மெகாவாட் ) போன்றவைகளுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டார்களா? எப்போது தான் விடியுமோ?

Monday, January 31, 2011

Q&A with Dr.Devi Shetty (Heart Specialist) on Heart problems, BP, junk food

Q: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.

Q: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Q: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart? What precautions would you recommend?

Ans : When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.

Q: Will taking anti-hypertensive drugs cause some other complications (short / long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.

Q: How would you define junk food?

Ans : Fried food like Kentucky, McDonalds, too many sweets and other deep fried foods.

Q: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.

Info: Obtained the above excerpt (chat with Dr.Devi Shetty, Heart Specialist – Part 3 of 4) from GemsofWisdom Group.

Saturday, January 29, 2011

உண்மையான கதாநாயகன்: அமிதாப் பச்சன்

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதுவர் பொறுப்பிலிருந்து, இந்தியாவின் பெருமிதமாகவே கருதப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் (IIFA) பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்ததே இதற்குக் காரணம்.

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தயவில் அந்த விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டாம் - என்று மும்பை நகர நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். சிங்கள அரசின் இனவெறி அமிதாபின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்த கணமே, கொழும்பில் நடந்த அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொறுப்புடன் அறிவித்தார் அமிதாப். அமிதாபே அப்படி அறிவித்துவிட, பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி கொழும்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்க நேர்ந்தது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அதைப் புரிந்து கொண்டு, 'இலங்கைக்குப் போகமாட்டேன்' - என்று ஆண்மையோடு அறிவித்ததன் மூலம், தான் ஒரு உண்மையான கதாநாயகன் என்பதை நிரூபித்தார் அமிதாப். தமிழரல்ல என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளித்ததன் மூலம், தான் உண்மையான மனிதர் என்பதையும் நிரூபித்தார்.

சில நட்சத்திரங்களைப் போல், சமூக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடாமல், துணிவாக முடிவெடுத்ததன் விளைவாகத்தான், ஆண்டுதோறும் நடக்கும் அந்த (IIFA) விழாவின் கௌரவப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதன் மூலம் மதிப்பிழந்து போனது அந்த விழா தானே தவிர, அமிதாப் என்கிற மகத்தான மனிதரல்ல.

Monday, January 3, 2011

சூப்பர் ஆபர்: 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்

திருப்பூரில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த, இலவசங்கள் என்ற அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது; மதுக்கடை பாரில் சரக்கு விற்பனையை அதிகரிக்க, இத்தகைய யுக்தி கையாளப்படுகிறது.

புத்தாண்டு, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், ஜவுளிக் கடைகள், பர்னிச்சர், நகைக்கடைகளில் வழக்கமாக இலவசங்களும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்படும். விற்பனையை அதிகரிக்க, இதுதொடர்பான போஸ்டர் ஒட்டப்பட்டு, நோட்டீஸ்களும் மக்களுக்கு வினியோகிக்கப்படும். திருப்பூரில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில், குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வகைகளை வாங்கும் "குடிமகன்'களுக்கு, இலவசங்களை தருவதாக அறிவித்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது, இது, "குடிமகன்'களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பின்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள பார் ஒன்றில் இத்தகைய சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வினியோகிக்கும் நோட்டீசில், "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கலால் மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக 65 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது; பண்டிகை காலங்களில், கூடுதலாக ஐந்து கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 20 நாட்களுக்குள் மூன்று பண்டிகை தினங்கள் தொடர்ந்து வருவதால், திருப்பூரில் சரக்கு விற்பனையில் முன்னிலை பெற "குடிமகன்'களை கவரும் வகையில், இலவசம் அறிவிப்புடன் நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

என் கருத்து…

  • சூப்பர் ஆபர்...
  • இது ரொம்ப மோசம். யாருக்குமே சமூகத்தை பற்றிய அக்கறை சிறிது கூட இல்லையா....
  • நம்ம நாட்டை ரொம்ப நல்ல டெவலப் பண்றன்கப்பா,,,,,,,,,,,,,,...

Sunday, January 2, 2011

அமைச்சர் விழாவில் ஒரு ஜிலேபிக்காக கால் கடுக்க நிறுத்தப்பட்ட பிஞ்சுகள்

கோவை: அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் ஒரு ஜிலேபிக்காக, பள்ளிக் குழந்தைகள்ஒரு மணி நேரம் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 34ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி சேலைவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, புலியகுளம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடந்தது.கலெக்டர் உமாநாத் தலைமை வகித்தார்.

நன்றி: தினமலர்

கால் கடுக்க நின்ற சிறுவர்கள்:இந்த விழா, நேற்று காலை 10.00 மணிக்கு துவங்கியது. விழா நடந்த பள்ளியில் உள்ளஉண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 20 பேர், விழா துவங்குவதற்கு முன்பே மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் இருவரைத்தவிர, அனைவரும் 10 வயதுக்குட்பட்ட இளம் சிறுவர்கள். இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவுக்கும் அவர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. இருப்பினும் அவர்களைஅங்கு நிறுத்தியதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவர்களை விசாரித்தபோது, அமைச்சர் கொடுக்கப்போகும் ஒரு"ஸ்வீட்'டுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. எப்போது "ஸ்வீட்'கிடைக்குமென்ற ஏக்கத்துடன் அந்த மாணவர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகநின்றனர்.

கால் கடுக்க அவர்கள் நிற்பது தெரிந்தோ, தெரியாமலோ அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., கோவைத்தங்கம் என வரிசையாக "மைக்' பிடித்து முழங்கிக்கொண்டிருந்தனர். எல்லோரும் பேசிமுடித்து, பயனாளிகளுக்கு பொருட்கள்வழங்கும் வரையிலும், அந்தச் சிறுவர்களுக்குத் தருவதற்கான "ஸ்வீட்' வாங்கப்படவில்லை. காத்துக் கிடந்த சிறுவர்கள்ஏமாற்றமடைவர் என்பதைக் கூட, அங்கிருந்த யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

புத்தாண்டு தினத்தில் அவர்களுக்குஏமாற்றமாகி விடும் என்பதை உணர்ந்தஆசிரியை ஒருவர், "சார், ஸ்வீட் வாங்கிட்டீங்களா, அமைச்சர் கொடுக்கிறாரா'என்று ஒவ்வொருவராக விசாரித்துக்கொண்டிருந்தார். அவர்கள் யாரும் முறையாக பதில் கூறாததால், கடைசியாக அந்தபொங்கல் பொருட்களையாவது அந்தச்சிறுவர்களுக்குக் கொடுங்கள் என்றும்கெஞ்சிப் பார்த்தார்.அதிகாரிகளோ, "சும்மா இரும்மா.பொங்கல் பொருட்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்' என மறுத்துவிட்டனர். அந்த ஆசிரியை "அமைச்சரை ஒருவாழ்த்தாவது சொல்லச் சொல்லுங்கள்'என்று மன்றாடினார். அதற்குள் விழாமுடிந்தது. ஸ்வீட் இல்லாததால் அதிகாரிகள் கையைப்பிசைந்து கொண்டிருந்தனர்.

மேடையில் இருந்து இறங்கிய அமைச்சர்பழனிசாமி, குழந்தைகளையும், அதிகாரிகளையும் பார்த்தார்.அதிகாரிகள் எதுவும் சொல்லாததால்,ஒரு குழந்தையின் தோளில் தட்டி "சரி வருகிறேன்' எனக்கூறி விட்டுச் சென்று விட்டார். அவராகவும் ஒரு வாழ்த்தும் கூடசொல்லவில்லை. இதனால், அந்தச் சிறுவர்களின் முகங்கள், ஏமாற்றத்தில் சுருங்கின. அவர் சென்ற பின், அவசர அவசரமாக சில ஜிலேபிகளை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்கள்; அதுவும் 2மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த வேதனைக் காட்சியின் உச்சக்கட்டம்.

என் கருத்து…

  • நன்றி கெட்டவர்களும் மனிதாபிமானமும் இல்லாதவர்கள் இந்த அரசியல் வாதிகள் நடக்கும் எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் காலத்திற்கு என்பதை யாரும் மறக்க கூடாது...
  • மனித மதிப்பை உணராத மாண்புமிகு எதற்கு. முதலில் தலைமை பண்பை கற்று கொள்ளுங்கள். பிறகு தலைமை தாங்க செல்லுங்கள்....... இந்த மந்திரிகளை ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டும்!...
  • அந்த விழா,அமைச்சர், தாங்கள் நிற்கும் காரணம் எதையும் மாணவர்கள் முழுமையாக உணந்திருக்கும் வாய்ப்பில்லை. இன்னும் நாம் மாணவர்களையும் ,சிறுவர்களையும் நடத்தும் முறையில் மிக மிக பின் தங்கியுள்ளது வெளிப்படுகிறது. மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்கள் தயவு செய்து இது போன்ற செய்திகளை படித்துவிட்டு தங்களது நிகழ்சிகளில் இதுபோல மனதை வேதனை படுத்தும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....
  • இது போன்ற நிகழ்வுகள் பல கல்வி நிறுவனகளில் நடை பெற்று வருகிறது என்பது உண்மை. வரும் VIP ய் குளிர்விக்க மாணவர்களை ஆட, பாட, மாஸ்டிரில் போன்று இன்னும் பல குரங்காட்டி வித்தைகளை மாணவர் மீது தினிகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு, தங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் வியாபார நிறுவனகளுக்கு தேவையானதை அடைகின்றனர். சிறிது யோசித்து பாருங்கள், இதனால் மாணவர்களுக்கு என்ன நன்மை? அவர்களை அடிமைகளாக, சர்கஸ் விலங்குகளை போல் மற்றுகிறோமே தவிர வேறு பலன் இல்லை....

Wednesday, December 15, 2010

Real Hero: Do you know Mr. Narayanan Krishnan?

Indian Idol?If some one asked us who is Indian Idol, immediately we might have started thinking about some waste/useless TV programs and naming someone… ha-ha.. let me leave my frustration and keep aside, at least for a moment…

Do you know? If you had not heard of Narayanan Krishnan, it is a collective failure. This is one of the most incredible stories of personal commitment.

Meet Indian Hero: Narayanan Krishnan, all of 29 years old now, does what he was professionally trained to do as a chef. Feed people. Only Krishnan does not do this in the swanky confines of a 5-star hotel. Every day, he wakes up at 4 am, cooks a simple hot meal and then, along with his team, loads it in a van and travels about 200 km feeding the homeless in Madurai, Tamil Nadu.

Krishnan feeds, often with his hands, almost 400 destitute people every day. And for those who need it, he provides a free haircut too

Who is Narayanan Krishnan? He (born 1981) is an Indian chef turned social worker. He started supplying meals to the homeless in Madurai, Tamil Nadu, India.

He was a bright, young, award-winning chef with a five-star hotel group, short-listed for an elite job in Switzerland. But a quick family visit home before heading to Europe changed everything.

"I saw a very old man eating his own human waste for food," Krishnan said. "It really hurt me so much. I was literally shocked for a second. After that, I started feeding that man and decided this is what I should do the rest of my lifetime."

Krishnan was visiting a temple in the south Indian city of Madurai in 2002 when he saw the man under a bridge. Haunted by the image, Krishnan quit his job within the week and returned home for good, convinced of his new destiny.

"That spark and that inspiration is a driving force still inside me as a flame -- to serve all the mentally ill destitute and people who cannot take care of themselves," Krishnan said.

Much to the dismay of his parents, CNN says, Krishnan abandoned his career plans and decided to spend his life and his professional training in looking after those who could not care for themselves. He has provided more than 1.2 million hot meals through his nonprofit organization Akshaya Trust, and now hopes to extend this to shelter for the homeless too.
Krishnan is the only Indian in a list of 10 heroes that CNN has picked worldwide to honor. One of them will be chosen CNN Hero of the Year, selected by the public through an online poll. If many Indians get together to vote for this inspiring man, he can win by a long mile.

Krishnan founded his nonprofit Akshaya Trust in 2003. Every day, he wakes up at 4 a.m., cooks a simple hot meal and then, along with his team, loads it in a van and travels about 200 kilometers (120 mi) feeding the homeless in Madurai, Tamil Nadu. He serves breakfast, lunch and dinner to 400 indigent and elderly people in Madurai. Since 2003, he has served more than 1.2 million meals.

The group's operations cost about $327 a day, but sponsored donations only cover 22 days a month. Krishnan subsidizes the shortfall with $88 he receives in monthly rent from a home his grandfather gave him.

Krishnan sleeps in Akshaya's modest kitchen with his few co-workers. Since investing his entire savings of $2,500 in 2002, he has taken no salary and subsists with the help of his once-unsupportive parents.

"They had a lot of pain because they had spent a lot on my education," he said. "I asked my mother, 'Please come with me, see what I am doing.' After coming back home, my mother said, 'You feed all those people, the rest of the lifetime I am there, I will feed you.' I'm living for Akshaya. My parents are taking care of me."

For lack of funding, the organization has been forced to halt construction on Akshaya Home, Krishnan's vision of a dormitory where he can provide shelter for the people he helps. Despite the demands and few comforts his lifestyle affords, Krishnan says he's enjoying his life.

"Now I am feeling so comfortable and so happy," he says. "I have a passion, I enjoy my work. I want to live with my people."

International Accreditation: CNN has nominated Indian Narayanan Krishnan (the only Indian) in the top 10 CNN Heroes. A panel comprised of luminaries recognized for their own dedication to public service selected this year's top 10 CNN Heroes, according to CNN.com. The names were chosen from more than 10,000 nominations submitted by viewers in 100 countries.

My take: I am happy that I stayed, studied in that wonderful divine city, Madurai and happy that I got a chance to meet him. After look him, it remembered me about Vallalar and ISKCON’s Food for life, but the above personality is entirely different not associating himself with any religion. Stories like these really help restore some of my faith in humanity. The amazing things some people are capable of doing never cease to astound me. His work is Divine...Its beyond what any words can appreciate. May God bless him with the strength to keep going!!

What you can do? Check out the Akshaya Trust Web site and see how to help.

Disclaimer: Just publishing in English for the sake to reach more ‘illiterate’ people…BTW, I don’t have any affiliation with this trust. But I am happy to promote and spared the word…

வயது 112 : ஓய்வறியாமல் உழைக்கும் "இளைஞர்'

மாணிக்கம் (Age 112)  ஓய்வறியாமல் உழைக்கும் "இளைஞர்'

யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார். என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறு மனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது"இளைஞரை' நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.

Thanks: Dinamalar

Thursday, October 21, 2010

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....