Showing posts with label ஓட்டு. Show all posts
Showing posts with label ஓட்டு. Show all posts

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Saturday, April 23, 2011

தமிழகம் முழுவதும் மின்சார சப்ளை வெட்டு: சென்னையிலும் இனி ஒரு மணி நேரம் "பவர் கட்'

தமிழகத்தில் வரும் நாட்களில் மின் வெட்டை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக மின் வாரியம் கைவிரித்துள்ளது. மின் வெட்டு சரியாகி சகஜ நிலை திரும்ப சில வாரங்களாகும் என்பதால், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பகலில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி, சென்னையிலும் இதுவரை இல்லாத வகையில், இப்போது மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. தினம் ஒரு மணி நேரம் சென்னையிலும் இனி மின் வெட்டு அமலில் இருக்கும் என, மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் வினியோகம் செய்ய முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் திண்டாடி வருகிறது. இதற்கு தேவையான மின் உற்பத்தி இல்லை என கூறப்பட்டாலும், மின் உற்பத்தி நிலையங்களை சரியாக நிர்வகிக்காதது மற்றும் புதிய மின் திட்டங்களை உரிய வகையில் திட்டமிட்டு துவக்காதது போன்றவையே சரியான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியவில்லை. மின் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களித்து வந்த காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு இல்லை. பருவ நிலை மாறியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. அடுத்து வரும் மாதங்களில் நிலவும் பருவ நிலை மூலமே காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், வாக்காளர்களை மனதில் கொண்டு மின் வெட்டைக் குறைத்து அமல்படுத்தி வந்தனர். தற்போது, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வழக்கம் போல் மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமலுக்கு வருகிறது. எனவே, மின் பற்றாக்குறையை பொதுமக்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துவதாகவும் மின் வாரியம் கூறியுள்ளது.

நன்றி மின் வாரியம். சென்னை மக்களுக்கும் மின் வெட்டை பற்றி தெரியட்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடங்குளம் பவர் பிளான்ட் ஓபன் ஆனால் தான் மின் வெட்டு தீரும். இதில் இருந்து ஒன்று நன்றாக புரிகின்றது. நம் தமிழகம் கற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இனி இரவு நேரங்களில் ஒளி கொடுக்க தீ பந்தங்கள்.. காற்றுக்கு பனை விசிறி.. ஒரு இடத்துக்கு செல்ல மாட்டு வண்டி...ஹ்ம்ம்... "ஓட்டு போட்டவர்கள் இருளில்" "ஓட்டு வாங்கி ஜெயித்தவர்கள் பணச் சுருளில்" இது தான் ஜனநாயகமா?

தமிழகத்தின் தற்போது மின் தேவை 12000 மெகாவாட். ஆண்டு தோறும் மின் தேவை 1000 மெகவாட் ஆக உயந்து கொண்டே போகிறது. இதற்கு புதிய தொழில் துவங்குவது மட்டும் காரணம் இல்லை. வீடுகளில் மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்துகொண்டே இருக்கின்றது. மேலும் இலவசமாக மின்சாரம் பெரும் பயனாளிகள் தொகை கூடிகொண்டே செல்கின்றது. தற்போதைய மின்சாரம் 8000 மெகாவாட் அளவில் மட்டுமே வழங்கபடுகிறது. பற்றாகுறை 4000 மெகாவாட் ஈடு கட்ட அரசிடம் எந்த திட்டம் இல்லை. இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து உள்ளது. காற்றாலை மூலம் பெரும் மின்சாரம் சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். இரு திராவிட கட்சிகளும் இந்த முக்கிய கட்டமைப்பு விசயத்தில் அக்கறை காட்ட வில்லை என்பதே உண்மை. எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் மின் விசிறி ,கிரைண்டர், மற்றும் மிக்சி மூன்றும் அனைவருக்கும் இலவசமாக வழங்க தேர்தலில் அறிவிப்பு வேறு. தற்போது உள்ள நிலையில் மின் தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் ஒரு தொடர் கதையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு முழு பொறுப்பு தமிழகத்தை தொடர்ந்து ஆண்ட இரு திராவிட கட்சிகளே!!

ஆங்கிலத்தில் ஓர் வாக்கியம் உண்டு "Everything has its own price, but the price need not be necessarily in monetary terms". இலவசத்தின் விலையில் இந்த மின் நெருக்கடியும் அடக்கம். ஓர் சென்னை வாழ் தமிழனாக இந்த அளவேனும் என் மக்களின் துயரில் பங்குக்கொள்ள முடிகிறதே என்ற நிறைவு ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வரசின் செயலற்ற முறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. இன்று சென்னையை நோக்கி நீட்டும் மற்ற தமிழரின் விரல்கள் ஓர் அபாய மணியாகவே நான் கருதுகிறேன். சென்னையில் நீ இவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறாயே என்று யாவரும் கோபப்படவில்லை என் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்கு வீண் செய்கிறாய் என்பதே இன்றைய வினா? மக்களின் மின்சார செலவு விலைவாசியப்போல் தான் உயர்வை நோக்கிப்பயணிக்கும். அதுவும் நேற்றைய கம்ப்யூட்டர் இன்று லாப்டாபகவும் நாளைய டாப்லட்டகவும் மாறும் இக்காலத்தில் இது நிச்சயம் பொருந்தும். முதலில் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தொழிற்க்கூடங்களுக்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்கவேண்டும். அதே சமயத்தில் மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை செய்தல் வேண்டும்.ஓடிசாவில் உள்ளதைப்போல் மின்சாரவாரியத்தை மூன்றாக பிரித்தல் வேண்டும் "Generation, Transmission and Distribution". இந்த மூன்று பிரிவிற்குள் போட்டியை உருவாக்க வேண்டும். நிலக்கரி மற்றும் பிற raw materials வாங்குவதில் திறம்பட சுதந்திரமாக செயலாற்றும் நிர்வாகம் வேண்டும். Tender முறையை குறைந்த விலையைப்பார்த்து முடிவு செய்வதை தவிர்த்து சிறந்த சேவை மற்றும் value added services பார்த்து முடிவு செய்தல் வேண்டும். தமிழக மின்சாரத் துறைக்கு கடன் வாங்கும் அளவுகோல் நிர்ணயிக்கப்படவேண்டும். இது மட்டும் அன்றி தமிழக மக்கள் இத்துறையின் ஸ்டேக் ஹோல்டர் என்ற முறையில் மாதா மாதம் மின்சாரத் துரையின் செயல்பாடுகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

நான் என்னோட நண்பன்கிட்டே பேசிக்கிட்டே இருந்தேன். அவன் சொன்னான் மச்சான் சென்னைக்கும் ஆப்பு, ஹா ஹா இதை தான் நான் எதிர்பார்த்தேன். இந்த கொடுமையை தான, மற்ற மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனுபவித்து வந்தார்கள். சொல்ல போனால், அவரவர்களுக்கு மின்சாரம் தராமல் சென்னைக்கு தந்தார்கள். வீட்டில் AirCon, Water Heaters, Electric Cookers உபயோகம் கூடி விட்டது. இதனை unit மின்சாரம் தாண்டினால், இவ்வளவு ரூபாய் கட்டணும் என்று சொல்ல மட்டும் மூளை இருக்கு, அப்போ அவ்வளவு மின்சாரம் உற்பத்தி வேண்டும் என்று புத்தி இல்லையா? Tidal Park காம், IT Park காம், கார் கம்பெனி யாம், செல் போன் கமபனி யாம் - அய்யா கருணாநிதி, இதெல்லாம் யாருக்கு பிரயோஜனம்? UPS - Generator இருக்குற வீடு, இந்த அக்னி வெயிலில் கொஞ்சம் தப்பிக்கும், ஆனால் அடி தட்டு மக்கள் என்ன செய்வார்கள்? 1760000000000 ஊழல் செய்ய முடியும், ஆனால் 1760000000000 watts மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. இதுக்கு எதுக்கு மந்திரி, அரசு? உங்கள் தொலை நோக்கு சிந்தனை யை கண்டு, மக்களுக்கு மயக்கம் வருது.

ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்களாம் - ஒரு மாசத்திற்கு 1500 கோடி - ஒரு வருடத்திற்கு 30000 கோடி ரூபாய்! இது வருடா வருடம் நடக்கும் கொள்ளைகளில் ( சென்னைக்கு தண்ணீர் விநியோகம், சாலை போடுதல், விவசாயிகள் மானியம் இதுபோல - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்! ) ஒன்று. நிரந்தர அல்லது நீண்டகால தீர்வை தராத அரசாங்கம் - தொலை நோக்கு திட்டம் இல்லாமல் அன்றாடங்காச்சியாக செயல்படுவது கேவலம். இந்த 30000 கோடி ரூபாயில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் 25 நிர்மாணம் செய்ய முடியும். பலருக்கு வேலை கிடைக்கும். அதிகப்படியான மின்னுற்பத்தியை வெளிமாநிலங்களுக்கு நல்ல காசுக்கு விற்பனை செய்யயும் முடியும். இப்படி சிந்தித்து, செயல்பட அரசுக்கு மூளை இருக்கிறதா தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இலவசமாக தரப்படும் டி.வி ( கிட்டத்தட்ட 40 மெகாவாட்), கிரைண்டர் ( கிட்டத்தட்ட 400 மெகாவாட் ) போன்றவைகளுக்கு கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டார்களா? எப்போது தான் விடியுமோ?

Thursday, October 21, 2010

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....