Showing posts with label புலம்பல்களும். Show all posts
Showing posts with label புலம்பல்களும். Show all posts

Wednesday, August 24, 2011

அ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை

100 நாட்களில் என்னங்க செய்திட முடியும். வெறும் நல திட்டங்கள் அறிவிப்பு தானே வந்திருக்கு. அது செயல்படுத்த பட்ட பின்னர் சாதனைக்கு மார்க் போடலாம்.அர்ரெஸ்ட் ம நடந்திருக்கு அது வரவேற்க தக்க ஒன்று. சமசீர் கல்வியில் ஜெயா பெயில் ஆகி விட்டார். இலவசங்கள் கொடுத்து தமிழக மக்களை மீண்டும் சோம்பேறி ஆக்குவதால் பலன் இல்லை. ஜெயா பேர் சொல்லும் அளவுக்கு தமிழக மக்களுக்கு நீண்ட நாள் பயன்படும் ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வந்து அதில் பல் ஆயிரம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து பல ஆயிரம் குடும்பங்கள் பட்டினி இல்லாமல் வாழும் பொது தான் ஜெயா 100 மார்க் வாங்குவார். இலவசங்கள் தருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நல்ல ஆட்சி கொடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்கள் கையில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பலி வாங்கும் படலத்தை கொஞ்ச நாள் தள்ளி போட்டு பலன் தரும் திட்டங்களை செயல்படுத்த துவங்குங்கள் அறிவிப்போடு நிற்க வேண்டாம்.

 

பொதுவாக நுறு நாட்களில் ஒரு அரசின் திறனை எடை போடுவது கடினம்..... ஆனால் ஜெயலலிதா அதை எளிது படித்தி இருக்கிறார்....சமச்சீர் கல்வி....ஜெயலலிதா எடுத்த் முடிவுகள் அனைத்தும் ஒரு நல்ல அரசுக்கான எந்த திறனை வெளிபடுத்தவில்லை....சமசீர் கல்வியில் வரட்டு பிடிவாதத்தால் கிட்டத்தட்ட் 65 நாட்கள் பிள்ளைகள் படிக்க புத்தகம் இல்லாமால் இருந்தது இந்த 100 நாளில் ஒரு சறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்....அடுத்து இதே மாதரியான பிழை புதிய சட்டசபைக்கு போக மறுத்ததிலும் தொடர்ந்தது......அடுத்து ஆட்சிய எப்பிடி திறன்பட செயல்படுத்த வேண்டும் என்பதை மறந்து முழு கவனமும் திமுகவை எப்பிடி எந்த பிரச்னையில் சிக்க வைப்பது என்பதில் அதிக நேரம் விரயமாகபட்டு உள்ளது....அடுத்து மத்திய திட்ட குழு நீதி கேக்கும் போது...அது சாத்தியமா என்று யோசிக்காமல் இரண்டு லட்சம் கோடி நிதி கேட்டது...அதாவது இந்திய பட்ஜெட்டில் இருபது சதவிதம் நிதி கேட்டது.....தேவையான நிதி பெறுவதில் சாமர்த்தியாமாக செயல்படவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது..... அடுத்து பெரும்பாலான மந்திரிகள் அவர்கள் துறை சமந்தப்பட்ட அடிப்படை கூட தெரியாமல் இருப்பது அடுத்த பின்னடைவு....அடுத்து இலவச அறிவிப்புகள்..... இதுவரை இலவசமா....மக்களை சோம்பேறி ஆக்க பாக்கிரிய?...என்று கூக்குரல் விட்டவர்கள்.....இன்றைக்கு அதே ஜெயலலிதா செய்கிறார் என்றவுடன்.....ஆகோ ஓகோ என்று மெய் சிலிக்கிரார்கள்..... இலவசத்தை பொறுத்தவரை சென்ற திமுக அரசின் செயல்களும் தவறு..... ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் அதையும் மிஞ்சுகிறார்...இன்றைய உலக பொருளாதாரம் விழுந்து கிடிக்கிறது.....அதை பற்றி ஒன்றும் கவலைபடமால் இலவச அறிவிப்புகள்.....குறிப்பாக இந்த லேப்டாப் ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட் 3400 கோடி வேண்டும்.....இது தேவையா....ஆனால் ஒரு விசயத்தில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.....இலவச அறிவுப்புக்காக பட்ஜெட்க்கு முன்பே 5000 கோடிக்கு மேல் வரி ஏற்றபட்டது உள்ளது..... அதாவது மக்களிடமே பணம் வங்கி அதை மக்களிடம் இலவசம் என்ற பெயரில் தருவது ஒரு வித திறமைதான்......ஆக மொத்தத்தில் இந்த அரசு இந்த 100 நாட்களில் எதிபார்ப்பை பூர்த்தி செய்தாதோ இல்லியோ....நிறைய மக்கள் எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறது....

 

ஆரம்பமே சூப்பர்...பதவி ஏற்க வந்த அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்..அம்மரண பழியை நேருமீது போட முயற்சித்து அதில் தோல்வி...அடுத்து சமசீர் கல்வி க்கு எதிராக அரசு உயர்நீதி மன்றம்,உச்ச நீதி மன்றம் என முயற்சித்து அதிலும் தோல்வி...மக்கள் மீது பட்ஜெட்டுக்கு முன்னரே வரிவிதித்து ஜனநாயகத்துக்கு ஒரு குத்து...நில அபகரிப்பு என்று சொல்லி திமுகவினர்மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட அராஜகம்..... தி.நகரில் ஆளும் கட்சி எம்.எல் ஏ காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கெ கைது செய்து வைக்கப்பட்டிருந்த தனது கட்சியினரை மீட்டு வெளியே கொண்டு வந்ததோடு மட்டுமல்ல..அந்த காவல்துறை அதிகாரியையும் இடமாற்றம் செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிய கதை...பலகோடி செலவில் கட்டப்பட்ட செயலகத்தில் பணி செய்யாமல் பூட்டி வைத்துவிட்டு வாடகை கொடுத்து பழைய கட்டிடத்தில் செயல் படும் கொடுமை...பணவிரயம்...ஒரு புதிய மின்திட்டம் கூட இதுவரை அறிவிக்காமல் கலைஞர் துவங்கிய திட்டங்களை மட்டுமே சார்ந்து நிற்கும் கேவலம்...எல்லாவற்றிற்கும் மேலாக முட்டாள்களின் மாதமான (ஏப்ரல் பூல்) ஏப்ரலில் புது வருடம் பிறக்கும் என அறிவித்து முட்டாள்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றது .... இவைகள்தான் இந்த அரசின் நூறு நாள் பெருமைகள்...

 

ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மீது வரி விதித்து விலை உயர்த்திய பெருமை இந்த அரசையே சாரும்...தலைமை செயலகம் கட்டிடம் தரமற்றது என கூறிவிட்டு இப்போது அதை மருத்துவமனையாக பயன் படுத்தப்போவதாக கூறி அந்தர் பல்டி அடித்ததும் இந்த அரசே.... கருத்து சொல்லும் அளவு எந்த முன்னேற்றமும் இல்லை, எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகள், சமசீர் சறுக்கல்கள், இலங்கை தமிழர் நிலையில் இரண்டும் கெட்டான் நிலைப்பாடு, தலைமை செயலக முடிவில் தனிநபர் விமர்சனம்... ஒரே ஆறுதல் சட்டம் ஒழுங்கு…

 

அரசியல் பள்ளிகூடத்தில் முதல் நான்கு ஆண்டுகள் எப்படி படித்தாலும் பாஸ் தான் ! அது வரை அவர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் சொல்லி அவர்களே மார்க் போட்டுகொல்வதால் எப்பவுமே நூற்றுக்கு நூறுதான் ! ஐந்தாம் அந்து பொது தேர்வில் வாங்கும் மார்க் தான் பாசா பெயிலா என்பதை நிர்ணயிக்கும் ! நடுவில் ஒழுக்க குறைபாட்டால் அல்லது பழைய தவறுக்கு டிஸ்மிஸ் ஆகாமல் இருந்தால் !

Sunday, August 14, 2011

தமிழ்நாடு நிலஅதிர்வும், புலம்பல்களும்…

தமிழகத்தில் ஆகஸ்ட் 12,2011 காலை திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.

 

 

இது பற்றி சில புலம்பல்கள்…

 

அதிமுக: திருட்டு முன்னேட்ற்ற கழகம் அடித்த, செய்த பாவம் தமிழக மக்களை தாக்க ஆரம்பித்து விட்டது...

 

திமுக: கலைஞர் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது. ஏழைகள் பசியாற உண்டார்கள். நாடு சுபிட்ஷமாக இருந்தது. ஆனால் இப்போது? விலைவாசி வானத்துடன் போட்டி போட்டுகொண்டு பறந்து கொண்டிருக்கிறது. பஸ் கட்டணம் கண்ணை கட்டுது. தாலிக்கு மட்டுமே வாங்கி கொண்டிருந்த தங்கம், இந்த புன்னியவதியில் ஆட்சியில் அருங்காட்சியஹங்களில் மட்டும் பார்க்க முடியும் போல் இருக்கிறது. கொலை, கொள்ளையை தடுக்க போலிசே இல்லை. ஆனால், பொய் கேஸ் போட்டு அநியாயம் செய்து, தன்மானம் இழந்து கிடக்கிறது. ஒரு ரூபாய் நல்ல அரிசியை பார்த்தவர்கள், புழு பூச்சி இருக்கும் அரிசியை வாங்கி, தின்று வாந்தி பேதி எடுத்து கிடக்கிறார்கள். பெங்களூர் கோர்ட்டு வா வா என்கிறது. தமிழ்நாடோ போ போ என்கிறது. ஆனால் ஆணவம் பிடித்து, சட்டசபை மாண்பை கெடுத்து, மக்கள் கடமையாற்ற கூடிய சபையை, ரெகார்ட் டான்ஸ் லெவெலுக்கு, நாலாந்தர (ஷகிலா) பட ரேஞ்சுக்கு கொண்டுவந்து, நாட்டை பற்றி கவலை இல்லாமல், மக்களை பற்றி கவலை இல்லாமல், அடிமைகள் கூட்டத்தை வைத்து, புகழ சொல்லி, தன்னிலை மறந்து கிடக்கிறார் கோமளவல்லி...

 

மக்கள்: வெள்ளைக்காரி சோனியாவினால் இந்தியா நாசமாகி கொண்டிருக்கிறது. கொள்ளைக்காரி ஜெயாவினால் தமிழ்நாடு தரைமட்டமாகி கொண்டிருக்கிறது. போதா குறைக்கு பூகம்பம், சுனாமி வேற இவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பயமுறுத்தி கொண்டிருக்கிறது. ஏன் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கைக்கு சீற்றம்? Ok, Jokes apart!!

 

 

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று. அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும். மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல்

 

பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.  சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும். ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது.

 

மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா? ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

 

சுற்றியும் மலைகளால் சூழ்ந்த பகுதி சேலம் .. சேலத்திலேயே நிலநடுக்கமா... மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்களே..அதை மீறியும் நிலா நடுக்கமா? இருக்கிற மலைய பூரா உடைச்சு granite ஸ்லாப் ஆக்கி வெளிநாட்டிற்கு விற்று கோடி கோடியா சம்பாதிக்கும் பண முதலைகளை ஒழித்து மலைகளை காப்பாற்றினால்தான் பூகம்பத்திலிருந்து தப்பிக்க முடியும் ,,,மக்கள் அனைவரும் புரிந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால்தான் இது நடக்கும்,,அன்னை பூமியை காப்பாற்ற ஒன்று படுவோம் ,,,அமெரிக்காவில் பலபல மடங்கு மலைகள் இருந்தாலும் ஒரு மலை கூட உடை படவில்லை,,இயற்கையை காப்பாற்றி வருகிறார்கள்… பேராசை ஒழித்தால்தான் மரங்களை காப்பாற்றி மழை பெற முடியும்,,மக்களே சிந்தியுங்கள்.

 

இயற்கையிலிருந்து நாம் விலகி இருக்கிறோம் என்பதையே இயற்கை சீற்றங்களான நில அதிர்வு, சுனாமி, வெள்ளம், புயல் ஆகியவை தெரிவிக்கின்றன. ஆத்து மண்ண அள்ளாதீங்க நா யாரு கேக்குறா , இப்போ குய்யோ முய்யோ நு கத்தினா என்ன பண்ண. இது முடிவல்ல ஆரம்பம் ,,,நம் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வரை…