Thursday, September 25, 2008

ஐ.ஏ.எஸ்.,மற்றும் ஐ.பி.எஸ்., நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி

 

சென்னையில் ஐ.ஏ.எஸ்.,மற்றும் ஐ.பி.எஸ்., நுழைவுத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை அண்ணாநகரில் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணி தேர்வுக்கு பகுதி நேர மற்றும் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினரை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்து குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

வரும் நவ.,9ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது. தகுதியுள்ள மாணவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் செப்.,30க் குள் அனுப்ப வேண்டும்.

நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, கோயம் புத்தூர், நெல்லை, சேலம், வே லூர், சிதம் பரம், தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய ஊர்களில் நடக்கிறது. இவ்வாறு சென்னை அண்ணா மேலாண்மை நிலைய பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பார்வையற்ற ஒருவரின் சாதனையும் & தகவல் உரிமைச் சட்டம்

 

"நீ பார்வையற்றவன், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, நீ கிராமத்தின் சுமை, அமைதியாக வீட்டில் உட்கார்ந்து இரு, உனக்கு கிராமத்தினர் சாப்பாடு போடுவர்' என்ற, பலரின் விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கி சாதனை படைத் துள்ளார் பார்வையற்ற ஒருவர். அவரின் இச்சாதனைக்கு தகவல் உரிமைச் சட்டம் துணை புரிந்துள்ளது.

குஜராத், ராஜ்கோட் மாவட்டம் ரங்காரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னாஜி. பார்வையற்றவரான இவர், எதையாவது சாதிக்க வேண்டும். தன்னால் கிராமத்தவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என, நினைத்தார். ஆனால், அவரின் முயற்சிக்கு கிராமத்தினர் யாரும் கை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக, மேற்குறிப்பிட்ட வாசகங்களை கூறி நோகடித்தனர். இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. ரத்னாஜிக்கு அவரின் சகோதரர் துணை புரிந்தார். தகவல் உரிமைச் சட்டம் பற்றி அறிந்த ரத்னாஜி, அதன்மூலம் தன் கிராமத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, விண்ணப்பித்தார். அதில், "ரங்காரு கிராமத்தில், ஆழ்குழாய் கிணறுகள் போடப் பட்டுள்ளன. சாக்கடை வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட பணிகள் எதுவும் கிராமத்தில் நடக்கவில்லை. நடந்து முடிந்து விட்டதாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கென ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் பதவியில் இருப்பவர் களால் அபகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை கிராமத்தினரிடம் தெரிவித்தார் ரத்னாஜி. உடன் அவர்கள் கொதித்தெழுந்தனர். ஊராட்சி உறுப்பினர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டனர். இதிலிருந்து, கிராம வளர்ச்சிப் பணிகளில் எந்தளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை மக்கள் அறிந்தனர். தற்போது, பார்வையற்றவரான ரத்னாஜியிடம் யோசனை கேட்பதோடு, அவருக்கு துணை நிற்கவும் துணிந்து விட்டனர். பொய் சொன்ன கிராமத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துவங்கி விட்டனர்.

பார்வையற்றவரான ரத்னாஜி காட்டிய வழியை, குஜராத்தில் இன்று பல கிராமத்தினர் பின்பற்றத் துவங்கியுள்ளனர். "நான் பார்வையற்றவன் என்பதால், என்னை பலரும் குத்திக் காட்டிப் பேசினர். அதில், எவ்வளவு மனவருத்தம் அடைந்திருப்பேன் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த நபர்களுக்கு எதிராக என் நடவடிக்கையை துவக்கினேன். அப்போது தான் கிராமப் பணிகளில் ஊழல் நடந்திருப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. மக்களும் உண்மையை அறிந்து கொண்டனர்' என்றார் ரத்னாஜி. ராஜ்கோட்டில் உள்ள தகவல் உரிமைச் சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த பங்கஜ் ஜோக் கூறுகையில், "ரத்னாஜியும், அவரின் சகோதரரும் எங்களிடம் வந்தனர். தகவல் உரிமைச் சட்டம் மூலம் ஊழலை வெளிக்கொணர முடியுமா என கேட்டனர். நாங்களும் முடியும் என்றோம். அவர்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்க நாங்கள் உதவி செய்தோம். நல்ல பலன் கிடைத்துள்ளது' என்றார்.

வாழைத்தாரில் மொத்தம் 340 காய்கள்

image தூத்துக்குடி அருகே ஒரு தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரில் மொத்தம் 340 காய்கள் இருந்தன. "30 ரூபாய் செலவு செய்து வாழை மரத்தை வளர்த்தால், அதில் விளையும் தாரை, 300 ரூபாய்க்கு விற்கலாம்' என, விவசாயி மாடசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்துள்ள சேர்வைக்காரன் மடத்தில், ஜோஸ்வா ரத்தினராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில், மாடசாமி என்பவர் வேலை செய்து வருகிறார். அங்கு, "கற்பூரவல்லி' வாழை இனத்தைச் சேர்ந்த ஆயிரம் வாழைகள், கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் பயிரிடப்பட்டன. தற்போது அந்த வாழை மரங்களின் தார்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. அதில் பெரும்பாலானவை வெட்டி விற்கப்பட்டன. அவ்வாறு விளைந்த ஒரு தாரில், 19 சீப்புகளில், மொத்தம் 340 காய்கள் இருந்தன.

விவசாயிக்கு பாராட்டு : தூத்துக்குடியில் நேற்று நடந்த நுண்நீர் பாசனக் கருத்தரங்கிற்கு, அந்த கற்பூரவல்லி "மெகா சைஸ்' வாழைத் தாரை, விவசாயி மாடசாமி கொண்டு வந்திருந்தார். அந்த தாரைப் பார்த்து பாராட்டி கலெக்டர் பழனியாண்டி உள்ளிட்டோர் மாடசாமிக்கு பரிசு வழங்கினர். மாடசாமி கூறுகையில்,"தேரி செம்மண், நுண்நீர்ப் பாசனம், நல்ல உரம் ஆகியவற்றால் வாழைத்தார் நன்கு வளர்ச்சியடைந்து, அதில் 340 காய்கள் உள்ளன. ரூ. 30 செலவு செய்து "கற்பூரவல்லி' வாழை மரத்தை வளர்த்தால் அதில் கிடைக்கும் தாரை வெளிமார்க்கெட்டில் ரூ. 300 வரை விற்கலாம்' என்றார்.

மனித நேயம் காத்த பெண் போலீசுக்கு தங்க வளையல்கள் பரிசளித்து கவுரவம்

 

imageகொச்சி:மருத்துவமனையில் இறந்த ஏழைப் பெண்ணின் உடலை பெறு வதற்கு, அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தனது தங்க வளை யல்களை கழற்றிக் கொடுத்தார் கேரளாவைச் சேர்ந்த பெண் போலீஸ். அவரின் மனித நேயமிக்க இந்த செயலை பாராட்டி கோல் கட்டா தன்னார்வ தொண்டு நிறுவனம், நான்கு தங்க வளையல் களை பரிசளிக்க முடிவு செய் துள்ளது. 

கேரளா திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷா. ஏழைக் குடும் பத்தை சேர்ந்தவர். சில வாரங் களுக்கு முன் உஷாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது. அதில் உஷா கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஒல்லூர் போலீஸ் ஸ்டே ஷனில் புகார் செய்யப் பட்டது. விசாரணை நடத்தும் படி, அங்கு பணிபுரிந்த பெண் போலீஸ் அபர்ணா மற்றும் மேலும் ஒரு போலீஸ்காரரையும் அனுப்பி வைத்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற் குள், உஷா இறந்து விட்டார். உஷாவின் உடலை உறவினர் களிடம் ஒப்படைக்க மருத்துவ மனை நிர்வாகம் மறுத்து விட்டது. சிகிச்சை அளித்ததற் கான கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, மருத்துவ மனை நிர்வாகம் கண்டிப்பாக கூறி விட்டது. எங்களிடம் அத்தனை பணம் இல்லை என, உறவினர்கள் கூறியும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் போலீஸ் அபர்ணா, மருத்துவமனை நிர் வாகிகளிடம் பேசி, கட்டணத்தை 20 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். ஆனால், அந்த பணத்தையும் அவர் களால் செலுத்த முடியவில்லை.

நேரம் கடந்து கொண்டிருந் தது. உஷாவின் உறவினர்கள் அழுது புலம்பினர். எங்கெங்கோ சென்றும் பணம் கிடைக்கவில்லை. இதைப் பார்த்த அபர்ணாவின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. உஷாவின் உறவினர்களிடம் சென்று, தான் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்களையும் கழற்றிக் கொடுத்தார். இதை அடகு வைத்து, உடலை திரும்ப பெறுங்கள் என கூறினார். இதையடுத்து, வளையல் களை அடகு வைத்து உஷாவின் உடலை உறவினர்கள் திரும்ப பெற்றனர். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

இதைப் பார்த்த கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், அபர்ணாவின் மனித நேயத்தை பாராட்டி, அவருக்கு நான்கு தங்க வளையல்களை பரிசளிக்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரா கூறியதாவது: இதுபோன்ற மனித நேயச்செயல்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அப்போது தான், மனித நேயம் அதிகரிக்கும். எங்கள் நிறுவனத்தின் நோக்கமும் அதுதான். அடுத்த ஆண்டு அபர்ணாவை கோல்கட்டாவிற்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த திட்ட மிட்டுள்ளோம். அப்போது, அவருக்கு வளையல்கள் பரிசளிக்கப்படும். இவ்வாறு சந்திரா கூறினார்.

Saturday, September 20, 2008

Roja songs - Video & lyrics

 
Here i have listed my two favorite songs, which released before many years before in the screen.

This song reflects the desires

paadal:chinna chinna aasai
Singer:minmini
varigaL:vairamuththu

chinna chinna aasai siragadikka aasai
muththu muththu aasai mudindhuvida aasai
vennilavu thottu muththamida aasai
ennaiyindha bhoomi sutrivara aasai
                                                (chinna)
malligaip poovaai maarivida aasai
thenralaik kandu maalayida aasai
maegangalaiyellaam thottuvida aasai
soagangalaiyellaam vittuvida aasai
kaarkuzhalil ulagaik kattivida aasai
                                               (chinna)
saettru vayalaadi naatru nada aasai
meen pidiththu meendum aatril vida aasai
vaanavillaik konjam uduththikkolla aasai
paniththulikkul naanum paduththukkolla aasai
chiththiraththu maelae saelai katta aasai
                                               (chinna)



This song reflects the feelings, emotions and love

 

paadal:kaadhal roajaavae engae nee engae
Singer: S P baalasubramaniyam
varigaL: vairamuththu

kaadhal roajaavae engae nee engae
kanneer vazhiyudhadi kannae
kannukkul needhaan kanneeril needhaan
kanmoodip paarththaal nenjukkul needhaan
ennaanadhoa aedhaanadhoa sol sol
                                                (kaadhal)
thenral ennaith theendinaal saelai theendum njaabagam
chinnap pookkal paarkkaiyil dhaegam paarththa njaabagam
velli oadai paesinaal sonna vaarththai njaabagam
dhaegam rendum saergaiyil moagam konda njaabagam
vaayillaamal poanaal vaarththai illai kannae
neeyillaamal poanaal vaazhkkai illai kannae
mulloadudhaan muththangalaa sol sol
                                                   (kaadhal)
veesuginra thenralae vaelai illai inru poa
paesuginra vennilaa penmai illai oayndhu poa
poo valarththa thoattamae koondhal illai thaeindhu poa
boomi paarkkum vaanamae pulliyaagath thaeindhu poa
paavai illai paavai thaevai enna thaevai
jeevan poana pinnae saevai enna saevai
mulloadudhaan muththangalaa sol sol
                                                     (kaadhal)

beauty of a woman

 Cuty

The beauty of a woman is not in the clothes she wears,
The figure she carries, or the way she combs her hair.
The beauty of a woman must be seen from her eyes,
Because that is the doorway to her heart,
The place where love resides.
The beauty of a woman is not in a facial mole,
But true beauty in a woman is reflected in her soul.
It is the caring that she lovingly gives,
The passion that she shows.
The beauty of a woman
With time, only Grows..
She's Mother, Sister, Wife, Friend..many and many finest roles!
Let's Salute every women...

God might struggled to create this wonderful feature on the earth :) 

Thursday, August 14, 2008

HappyIndependenceDay

Lets get together and remind our 1 billion country men and women, the sacrifices that went into creating what we today call OUR INDIA - one of the fastest growing nations in the world and the superpower of tomorrow.

Millions of our forefathers who fought for India's freedom - many whose names no one remembers, millions of those unsung heroes who gave their lives passionately to protect the soil you stand on today! Its because of these heros that India sees a new dawn, an era of prosperity.

It's now time we let the world know that India has arrived. Lets tell everyone around us how much we love India. Lets go that extra mile and do that something special for India.

Please do it. Dont only stopping just by thinking...

Jai Hind!
Saare Jahan Se Achha, Hindustan Hamara.

Tuesday, August 5, 2008

Thavamindri



thavamindri kidaitha varamae ini vaazhvil ellaam sugamae (2)

nee sooriyan naan veNNila un oLiyaal thaanae vaaLgiraen
nee sooriyan naan thaamarai nee vandhaal thaanae malarkiraen
nee sooriyan naan vaanmuhil nee nadandhidum paadhai aagiraen
nee sooriyan naan aazhkadal en madiyil unnai yaendhinaen

thavamindri kidaitha varamae oah... ini vaazhvil ellaam sugamae

oah kadivaaLam illaadha kaatraaga naam maaRa
vaendaama vaendaama...
kadigaaram illaadha oor paarthu kudiyaera
vaendaama vaendaama
kai koarkkum poadhellaam kairaegai azhiyattum
muththathin eNNikkai mudivindri poagattum
pahal ellaam iravaagi poanaal enna
iravellaam vidiyaamal neendaal enna
nam uyir rendum udal ondril vaazhndhaal enna

thavamindri kidaitha varamae ini vaazhvil ellaam sugamae

soodaana idam vaendum sugamaagavum vaendum
tharuvaaya tharuvaaya
kaNNendra poarvaikkuL kadhavendra meththaikkuL
varuvaaya varuvaaya
vizhundhaalum un kaNNil kanavaaga naan vizhuvaen
vizhundhaalum un nenjil ninaivaaga naan vizhuvaen
madindhaalum un moochin soottaal madivaen
piRandhaalum unnaiyae dhaan meendum saervaen
ini un moochai kadan vaangi naan vaazhuvaen....

thavamindri kidaitha varamae ini vaazhvil ellaam sugamae

nee sooriyan naan veNNila un oLiyaal thaanae vaaLgiraen
nee sooriyan naan thaamarai nee vandhaal thaanae malarkiraen
nee sooriyan naan vaanmuhil nee nadandhidum paadhai aagiraen
nee sooriyan naan aazhkadal en madiyil unnai yaendhinaen

thavamindri kidaitha varamae ini vaazhvil ellaam sugamae