Friday, October 10, 2008

Really India is the second fastest growing economy?


Responding to IMF's scaling down of India's growth rate to 7.9%, finance minister Chidambaram on Wednesday said, "(Even at 7.9%) India will still be the second fastest growing economy in the world."

That, Mr FM, is not quite true. In fact, this is just a frequently repeated myth that is fast acquiring such legitimacy that everyone believes it. Actually, there were 23 countries whose economies grew faster in 2007, with 19 growing at double-digit rates. Even China, with its 11.4% growth ranked only 12th in the list.

The tiny mountain kingdom of Bhutan was ranked second with a growth rate of 22.4% a little behind the 23.4% recorded by oil and gas-rich Azerbaijan. The third country in the list was not from Asia or Latin America but was Angola, in southern Africa. These three were also the only countries in a list of 200 that registered growth of over 20% in their GDP last year. To be fair to the finance minister, most countries in the list of the fastest growing economies are small nations where even a minor economic change can escalate the growth rate.

If one looks at the world's 20 biggest economies, then indeed India has the fastest growth rate, next to China.
One reason behind the high growth rate in Bhutan is the Tala Hydroelectric project. Similarly, Timor-Leste's 19.8% growth can be explained partly by the destruction of economic infrastructure in the unrest period, which lowered the base, and the recent joint petroleum development project with Australia granting 90% revenue to East Timor, which fueled the already small GDP.

Another important factor fueling the growth rate of several countries is the extent to which the export of oil and natural gas contributes to their economy. Countries like Angola, Azerbaijan, East Timor, Qatar, former CIS countries, Venezuela etc, have registered high growth rates because as major oil exporters they gained big time from the spike in international crude oil prices.

Ethiopia registered 11.4% growth, becoming the fastest growing non-oil dependent African nation. Although export of coffee and other agricultural products are helping the economy in earning foreign exchange, in Ethiopia's case too a small base clearly makes it easier to achieve high growth rates.

It is also easy to see why the developed world has relatively low growth rates. Given an already huge base, it takes a lot to achieve high growth. Thus, the GDP of the US, France, Japan, Germany, and Canada all grew at less than 2% per annum.

This explains why the myth about China and India being the world's fastest growing economies is so prevalent. Of the really large economies they are indeed the fastest growing. According to the World Bank nominal GDP list of 2007, China was ranked the fourth largest economy and India the twelfth largest.

Look at the list of the 25 fastest growing economies in the world and you would find that India and China apart, none of the others is anywhere near the top of the list of the world's largest economies. Strange as this may sound, calling India the world's second fastest growing economy may be incorrect, but it is not really misleading.

Wednesday, October 1, 2008

Income Tax Rates for the Financial Year April 1, 2008 to March 31, 2009

The direct taxes rates for the financial year 2008-2009 (Assessment year 2009-2010) are significantly lower than that for the financial year 2007-2008.

Threshold limit of exemption from personal income tax in the case of all assesses is Rs.150,000. The threshold limit for a resident woman assesses is Rs.180,000, while for a resident senior citizen is Rs.225,000.

I. For Individuals (includes nonresidents), HUF, AOP and BOI

1. From 1,50,000 to 3,00,000 : 10% of amount greater than Rs. 1,50,000.
2. From 3,00,000 to 5,00,000 : 20% of amount greater than Rs. 3,00,000 plus Rs. 15,000.
3. Above 5,00,000 : 30% of amount greater than Rs. 5,00,000 plus Rs. 55,000.

II. For Resident Woman (except senior citizen)

1. From 1,80,000 to 3,00,000 : 10% of amount greater than Rs. 1,80,000.
2. From 3,00,000 to 5,00,000 : 20% of amount greater than Rs. 3,00,000 plus Rs. 12,000.
3. Above 5,00,000 : 30% of amount greater than Rs. 5,00,000 plus Rs. 52,000.

III. For Resident Senior Citizen

1. From 2,25,000 to 3,00,000 : 10% of amount greater than Rs. 2,25,000.
2. From 3,00,000 to 5,00,000 : 20% of amount greater than Rs. 3,00,000 plus Rs. 7,500.
3. Above 5,00,000 : 30% of amount greater than Rs. 5,00,000 plus Rs. 47,500.
Note: For nonresident senior citizen the exemption limit is Rs. 1,50,000.

Education Cess

The total tax amount (including surcharge) is subject to an education cess at 3%.

Surcharge

A 10% surcharge (tax on tax) is applicable if the net income (after all the non-taxable allowances and deductions) is above Rs. 10 lakh. This surcharge is subject to marginal relief. The net income tax and surcharge shall not exceed the total amount payable as on income tax on income of Rs. 10,00,000 by more than the amount of total income that exceeds Rs. 10,00,000.
*Senior Citizen Saving Scheme 2004 and the Post Office Time Deposit Account added to the basket of saving instruments under Section 80C of the Income Tax Act.
*Additional deduction of Rs.15,000 allowed under Section 80D to an individual paying medical insurance premium for his/her parent or parents.

Statutory Obligation to file return (Section 139(1)).

Every individual has to furnish the return of income if his total income before allowing deduction under Chapter VI-A (that is under sections 10A, 10B, 10BA, 80C to 80U) exceeds the maximum amount which is not chargeable to income tax.

Friday, September 26, 2008

Pinkslips: Do you work for IT?

TCS planning more layoffs, Wipro sacks 1000, Satyam to axe 4,500 ... It seems the days of pink slips have come to haunt Indian IT pros. Though all companies have termed these terminations performance-based, it is anyone's guess that global slowdown has started hurting Indian IT cos.

Seems the ugliest face of slowdown -- pink slips -- is back at Indian IT cos. After Wipro sacking thousand and putting another 3,000 under scanner, came the reports of the country’s no. 1 IT exporter TCS planning another round of layoffs.

The fourth largest IT services exporter Satyam too is reported to be giving pink slips to as many as 4500 of its employees.
Incidentally, all companies have termed the job cuts as purely performance-based. Said a Satyam spokesperson, "The bottom 5 per cent of those who have got a bad appraisal are put under PIP (performance improvement plan) and given dummy projects to prove themselves. If they fail they will be shown the door. But some of them marked for PIP said they have been given very little time to come up as winners."

However, even as it downsizes, Satyam continues to hire new employees in thousands. Over 40 per cent of them are fresh blood just passing out of college.

Are pink slips really based on employee performance or are they a result of a tough economy. Are pink slips really a belt tightening measure from IT companies facing sagging bottomlines due to global economic turmoil?

The HR department of other IT companies too sings a similar tune. Lets we here their tune....

Late last year, the global IT giant IBM had reportedly laid off 700 entry-level trainee programmers (ELTPs) across its offices in India. Zensar too had reportedly given pink slips to 2 per cent of it staff, again the company claimed that it was on performance basis. The increments and salaries too have been a causality at most IT firms. Here's looking into the companies who have taken the manpower call.

After delayed appraisals and cut in payout's, India's fourth largest IT service provider, Satyam Computer is reported to downsize its workforce by a whopping 4,500 employees. This translates to a little less than 9 per cent of the 51,000 employees that the company employs.

Company sources reveal that 1,500 employees have been put under the performance improvement plan (PIP), euphemism for employees put on watch list and asked to shape up or ship out. Apart from this, 3,000 others have not been given any increment in the last appraisal cycle, thereby indicating that their services are dispensable.

Last Friday, company’s chief Ramalinga Raju had sent out an email to all employees warning them, especially the ones on the bench, to not bunk office and be in their best dress code, failing which they may face strict disciplinary action.
The company is reported to have handed pink slips to about 400 engineers and associates in Hyderabad, Pune and Visakhapatnam centers. The company management reportedly asked some of the employees to move out of its rolls to a contractual agreement or leave.

Like its peers, Satyam too claims that the layoffs are a part of its appraisal system. Global head, human resources, SV Krishnan says, "Our experience has shown that around half of them exit the system either voluntarily or involuntarily. We have concluded our appraisal process some weeks back, and we believe we are witnessing similar trends like those in the past."
There were also reports that the company has deferred the joining date of 7500 graduates it had recruited from various college campuses this year. However, the company said that it has no intension of withdrawing these offers. Interestingly, the company has recently announced plans to hire 15000 this year.

According to a recent report Asia's largest software exporter, Tata Consultancy Services is gearing up to another round of layoffs. The company also plans to discourage employees from staying on bench for more than two months on any of its centers.

Incidentally, the company had also fired close to 500 employees, citing poor performance after its annual appraisal. It was also among the very first companies to announce a cut in the employee variable pay across the board. The company which sees some project delays this quarter, but no cancellations, terms this as an employee utilization exercise. The process will involve counseling employees and training them. Employees would be asked to undertake projects on which they have never worked on and will have to update their skills.

Recently, TCS also retrenched 15 employees from its Australian subsidiary. Interestingly, last month too, the company had shown door to some 25 employees from its Kolkata and Bangalore centers for fudging CV's. By June-end, the total employee strength TCS stood at 116,300, across 64 countries. The company hired 8,982 employees in the first quarter.

The bad news has come from India's third largest IT outsourcer, Wipro Technologies too. The company has already laid off 1,000 employees, and another 2,000 employees have been put on scanner.

The company is reviewing the performance of 60,000 global IT services employees from the senior leadership team down to the person with one-year experience.

Terming it as a regular exercise, company's corporate vice-president (human resources) Pratik Kumar said, "As the appraisal cycle gets over, a multi-layer review happens. Following that, people who have fallen in the lower quadrants of performance are put on watch. Some are asked to pull up and others are asked to move on."

He added that, "We took a closer look at our hiring and realized that we did not need to hire more, since there were people on the bench." Many employees are being given counseling to improve their performance, others may be asked to leave.
At the end of the quarter ended June 2008, Wipro’s IT services employee base had fallen to 61,345 from 62,070 employees at the end of the previous quarter.

In July, Mumbai-based Patni Computer Systems too gave pink slips to 400 employees on grounds of non-performance.
Terming it as a routine exercise and not a slowdown setback, country's sixth-largest exporter said that it is an effort to weed out non-performers.

Rajesh Padmanabhan, vice-president and head, global HR, Patni, said, "This is an absolutely regular appraisal that is important for any performance-driven organisation. It is something standard we do every year. Employees who have got 0-1 rating on a scale of 5 typically form the basis for the first-level shortlist. These are performance-based resignations; we've not issued any termination letters.”

However, industry sources reveal that the laid off employees included several project managers as well. Incidentally, while in case of TCS, the retrenched number was about 0.5 per cent of the workforce, for Patni, it made for closer to 3 per cent of the 14,800-strong workforce.

Narendra K Patni, Chairman and CEO, Patni Computer Systems said, "The overall market environment remains challenging with prevailing global uncertainties. We are cautious in our short-term outlook but remain positive on long-term prospects and are continuing our investments in identified areas."

The HR department of other IT companies too sings a similar tune. Are pink slips really based on employee performance or are they a result of a tough economy.

Are pink slips really a belt tightening measure from IT companies facing sagging bottomlines due to global economic turmoil?

மிச்சமிருக்கும் மனிதநேயம்

image

அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப செய்யும் தவறு, திரைக் கலைஞர்கள் மீது நடத்தும் அநாவசியத் தாக்கு தல்கள். யாரைத் தாக்கினால் எளிதில் விளம்பரமும் பரபரப்பும் தங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்ற சூட்சுமம் புரிந்தவர்கள் இந்த அரசியல் வியாதிகள். அந்த விளம்பரம்தான் அதிகார வியாபாரத்துக்கு இவர்கள் போடும் முதலீடு.

ஆனால் மக்களோ இதைப்பற்றி யோசிப்பதுகூட இல்லை பல நேரங்களில். தாங்கள் கண்ணால் பார்க்கும் உண்மைகளைக் கூட உணராமல், இந்த போலி அரசியவ்வாதிகளின் பின்னால் போய், நல்ல மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்துகிறார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற உண்மையை இவர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்த்தவர்கள்தான். ஆனால் அதை உணர மறுத்தார்கள், சுயநல மீடியா மற்றும் போலி அரசியல்வாதிகள் போட்ட கூச்சலில் மயங்கி.

பலரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் ரஜினி செய்த ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே எதிர்மறையாக்கி, ஒரு இனத்துக்கே அவரை எதிரியாக்கப் பார்த்தார்கள். இது எத்தனை பெரிய கயமைத்தனம்?

இப்போது மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் பால் தாக்கரே மற்றும் அவரால் வளர்க்கப்பட்ட விஷ விருட்சமான ராஜ் தாக்கரே.

இன்னும் இப்படிப்பட்ட பண்பற்ற தலைவர்களின் பின்னால் லட்சக் கணக்கில் அணிவகுக்கவும், அவர்கள் சொல்லும்போதெல்லாம் போஸ்டர்களைக் கிழிக்கவும், சாணி அடிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.
இந்தியா படித்தவர்கள் நிறைந்த நாடு என்று வெளியில் சொல்லிக் கொள்வதே எத்தனை வெட்கக்கேடான விஷயம்!

பண்பின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம், மக்களாட்சியின் தாயகம் என்று நம்மை நாமே சொறிந்து விட்டுக் கொள்வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? விஞ்ஞானமும், நவீனத்துவமும் வளர வளர மக்களிடம் மனிதத்துவம் மறைந்து வக்கிரம் வளர்ந்ததுதான் மிச்சம்!

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும் ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்வதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல... இன்னும் சற்றே மிச்சமிருக்கும் மனிதநேயம் அது!

கொடுத்த கடனில் மூழ்கிய லேமேன் வீழ்ச்சியும்.. இந்திய அதிர்ச்சியும்


image

லேமேன் வீழ்ச்சி... திவாலாகிவிட்ட லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பிரிட்டனின் மாபெரும் வங்கியான பர்க்லேஸ் முன் வந்துள்ளது.
உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings) நேற்று முன் தினம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்க தந்த பணம் 613 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், இந்தப் பணம் திரும்பி வரவில்லை.

இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர்களாவது உடனடியாதத் தேவை என்ற நிலையில், யாரும் முதலீடு செய்ய முன் வராததால் மஞ்சள் நோட்டீஸ் தந்துவிட்டது.
பவேரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து 1850ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர் ஹென்ரி லேமேன், இமானுவேல் லேமேன், மேயர் லேமேன் சகோதரர்கள்.

இந்த நிறுவனம் ஆரம்பித்த முதல் வர்த்தகம் பருத்தி வியாபாரம் தான். அடுத்ததாக புரோக்கரேஜ் உள்ளிட்ட துறைகளில் இறங்கியது.
அடுத்து அமெரிக்காவின் ரயில் பாதையை அமைக்கும் திட்டத்துக்கே நிதியுதவி செய்யும் நிலைக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. அமெரிக்கா சந்தித்த மிகப் பெரும் பொருளாதார சவால்களை எல்லாம் கூட தாக்குப்பிடித்தது இந்த நிறுவனம்.

கொடுத்த கடனில் மூழ்கி...

இதுவரை நஷ்டத்தையே பார்த்திராத இந்த நிறுவனம், இப்போது தான் கொடுத்த கடன்களிலேயே மூழ்கிப் போய்விட்டது.
மெரில் லின்ஜ் நிறுவனமும் இதே போன்ற நஷ்டத்தை சந்தித்தாலும் கூட, ஒரேயடியாக மூழ்கும் முன்பே அதை பேங்க் ஆப் அமெரிக்காவிடம் 50 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு தப்பிவிட்டது.

ஆனால், லேமேன் நிறுவனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இந்த நிறுவனத்தை வாங்க பர்க்லேஸ் வங்கி முன் வந்தது. ஆனால், அவர்கள் சொன்ன விலையைப் பார்த்துவிட்டு பர்க்லேஸ் ஓடிவிட்டது.
இப்போது திவால் ஆகிவிட்ட லேமேன் நிறுவனத்தின் மதிப்பு முழுமையாக சரிந்துவிட்டதால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்க திரும்பி வந்துள்ளது பர்க்லேஸ் வங்கி.

இப்போது இந்த நிறுவனத்தின், அதிகம் நஷ்டத்தை சந்திக்காத சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பர்க்லேஸ் முன் வந்துள்ளது. இதனால் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேருக்கு வேலை தப்பிவிடும் எனத் தெரிகிறது.

40,000 வேலைகள் பறிபோகும்...

ஆனால், லேமேனின் பெரும்பாலான பிரிவுகள் மூடப்படுவது நி்ச்சயமாகிவிட்டதால் சுமார் 40,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.

மும்பையில் 2,500 ஊழியர்கள்..

இதில் லேமேனின் மும்பை அலுவலகத்தைச் சேர்ந்த 2,500 பேரும் அடக்கம். இதில் பெரும்பாலானவர்கள் லேமேனின் பிபிஓ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, லேமேன் நிறுவனத்தின் பல நாட்டு அலுவலகங்களில் பெரும் அளவில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது வேலைகளும் பறிபோகவுள்ளது.

ஐஐஎம் பட்டதாரிகள்...

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு ஐஐஎம்கள் மற்றும் முன்னணி கல்வி நிலையங்களில் படித்தவர்கள். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆண்டுக்கு சில கோடி ஊதியத்தில் பணியில் உள்ளவர்கள்.

ஐஐஎம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிதி நிறுவனங்களில் தான் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வரும் ஆண்டுகளில், ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்துவது பெருமளவில் குறைந்துவிடும் என்றும் தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படாத வரை இந்த நிலை தொடரலாம்.

சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அடி...

இதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் புதிய சிக்கல் முளைத்துள்ளது. நெருக்கடிக்கு ஆளாகிவிட்ட லேமேன், மெரில் லின்ஜ், ஏஐஜி ஆகிய சர்வதேச நிதி-இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர்களை சத்யம், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

இப்போது இந்த நிறுவனங்களே கரைந்துபோய்விட்ட நிலையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்த நிறுவனங்களுக்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பணியமர்த்தப்பட்ட டீம்கள் கலைக்கப்படலாம். இந்த டீம்களின் ஊழியர்களை வேறு பிரிவுகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் மாற்றியாக வேண்டும்.

இந்திய சந்தையில் ரூ. 2,000 கோடி கரைந்தது...

இன்னொரு சிக்கலும் உள்ளது. லேமேன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையிலும், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிலும் ரூ. 2,000 கோடி வரை முதலீடுகளைச் செய்துள்ளன. இந்த முதலீடுகள் இப்போது காற்றோடு கரைந்துவிட்டன. இந்த முதலீடுகளுக்கு இப்போது எந்த மதி்ப்பும் இல்லை. இதனால் இந்த முதலீடுகளைப் பெற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

ஐசிஐசிஐ...

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி. லேமேன் முதலீட்டைப் பெற்றுள்ள இந்த வங்கியின் இங்கிலாந்து கிளைக்கு 80 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ஐசிஐசிஐயின் ஒட்டுமொத்த லாபத்தோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் பெரிய நஷ்டம் இல்லை என்கின்றனர்.

ரிசர்வ் வங்கி கிடு்க்கிப்பிடி...

இதற்கிடையே லேமேன் நிறுவனத்தின் இந்திய கிளைக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தனது அனுமதியில்லாமல் எந்தவிதமான பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என ஆர்பிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேவையே வாழ்க்கையாக


போலியோவால் கால்களை இழந்தவர் மக்களுக்கு சேவை செய்து வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தொண்டு உள்ளம் 22 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையையை வாழ்க்கையாக கொண்டு வாழ்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் பூலியப்பன். இவரது மகன் இருதாலய மருதப்ப பாண்டியன். போலியோவால் இரண்டு கால்களும் ஊனமடைநதன. தனது ஊனத்தை பொருட்படுத்தாமல் உத்வேகத்தோடு தானும் வாழ்ந்து சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள பாண்டியன் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். அரசு நலத்திட்டங்கள், சுகாதாரம் மருத்துவம் உள்பட படிக்காத மக்களுக்கு விளக்கி அவற்றை மக்கள் பெறவும் உழைத்து வருகிறார்.

350 பேருக்கு குடும்ப அட்டைகள், வீராணத்தில் 150 வீட்டு மனைப்பட்டா, அந்த வீடுகளை கட்ட கடனுதவியும் பெற்றுத் தந்துள்ளார். சுமார் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகைகளை பெற்றுத் தந்துள்ளார். தொழில் தொடங்குவோருக்கு கடனுதவிகளை பெற்றுத் தந்துள்ளார்.
பள்ளிகளில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துவது, அறிவொளி இயக்க கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியுள்ளார். அச்சங்குன்றம் கிராமத்திலிருந்து ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் வரை சுமார் 12 கிமி தூரத்திற்கு பேரணி நடத்தியது அவருக்கு மக்களிடம் பாராட்டை பெற்றுத் தந்தது.

அப்பகுதி மக்களுக்காக தாலுகா அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சகல அலுவலகங்களுக்கு ஊர்ந்து சென்றே சலுகைகளை பெற்றுத் தந்துள்ளார். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம் போலியோ விழிப்புணர்வு பேரணி போன்றவற்றில் கடந்த 22 ஆண்டுகள் ஊதியமும் இன்றி தொண்டாற்றி வருபவர்.

பல்வேறு சமூகத் தொண்டுகள் சத்தமில்லாமல் விளம்பரமின்றி செய்து வருகிறார் பாண்டியன். தனது கிராமம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களுக்கு சாலை, பஸ், குடிநீர் வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பெற்று தந்துள்ளார்.

இவரது சேவைகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர், ரோட்டரி கிளப் போன்ற பல்வேறு அமைப்புகள் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும் பசுக்கள் பாதுகாப்பு சங்கம் (திருநெல்வேலி-கன்னியாகுமரி) செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பசுக்கள் பாதுகாப்பு கோசாலை அமைத்தல், வயதான கால்நடைகளை பராமரித்தல், சாண எரிவாயு கலன் அமைத்தல், மருந்துகள் தயாரிப்பு, இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

2002ம் ஆண்டு திருநெல்வேலி சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். அறக்கட்டளை மூலம் கோவில்களில் இருந்து தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 விவசாயிகளுக்கு பிராணிகள் நலவாரிய விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின்படி தானமான வழங்கியுள்ளார்.
தனது நீண்டகால கனவான முதியோர் இல்லம், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் போன்றவற்றை உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறார். சேவையால் மக்கள் மனங்களை வென்ற இவரது சேவையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்....

இந்திய பணவீக்கமும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும்

image

ணவீக்கம் பற்றிப் பேசினால் எங்கே பாய்ந்துவந்து கன்ன வீக்கத்தை உண்டாக்கிவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது. இந்திய சாமான்யனின் உதடுகளும் உச்சரிக்கும் கொடூரமான வார்த்தைப் பிரயோகமாக பணவீக்கம் பேசப்படுகிறது. அதனால் கொஞ்சம் சுற்றி வந்து மூக்கைத் தொடலாம்.

ஆட்சிக்கு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இடதுசாரிகளுக்கு பதிலாக முலாயம் சிங்கை முட்டு கொடுத்து விட்டு ஜி-8 மாநாடு நடக்கும் ஹொக்கைடோவுக்கு விமானம் பிடித்த பிரதமர் மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷ்சை சந்தித்துப் பேசினார். நான்கு வருடங்கள் ஆட்சியைத் தாங்கிப்பிடித்த இடதுசாரிகளை கைகழுவிவிட்டு வேகவேகமாக ஜார்ஜ் புஷ்ஷுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசவேண்டிய அவசியம் பிரதமருக்கு ஏன் வந்தது?

அங்கேதான் அரசியல் சூட்சுமமும், மறைமுக மாட்சிமையும் அடங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்க்கு நமது பிரதமர் கொடுத்த வாக்குறுதியோ அல்லது ஜார்ஜ் புஷ் தம் மனதுக்குள் வைத்திருக்கும் வைராக்கியமோ ஏதோ ஒன்றை காப்பாற்ற வேண்டியே நமது பிரதமரும் காங்கிரஸ் கட்சியும் பறப்பது போல் தெரிகிறது.

அமெரிக்காவிற்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் அளவுக்கு கடந்த தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காப்பாற்றியுள்ளதா?

இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அதுபற்றிய எந்தக் கேள்வியும் அப்போது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தான் இந்த அணுசக்தி பிரச்னை இந்திய அரசியலில் அணுகுண்டு வீசத் தொடங்கியது. அப்போதிலிருந்தே இடதுசாரிகள் அதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆட்சியைக் காலி பண்ணி விடுவோம் என்று மிரட்டியே வந்தனர். காங்கிரசும் நாளை கடத்தி வந்தது. இப்போது எல்லாவற்றிற்கும் முடிவு தெரிய வரப்போகிறது.

ஜூலை எட்டில் ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் அதற்கடுத்த நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கிறார். பேசட்டும், யாரும் வேண்டாம் என்று கூறவில்லை.

இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தே தீரவேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய, மன்மோகன் சிங் அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தால் நாட்டுக்கு நன்மைதான் என்றே வைத்துக்கொண்டாலும் பழைய நண்பர்களை மறந்து, நட்பைத் துறந்து, அதனால் ஆட்சியை இழந்தாலும் அல்லது இடதுசாரிகளுக்கு பதில் மூன்றாம் அணியைச் சேர்ந்த (முலாயம் சிங்கின்) சமாஜ்வாடி கட்சியின் ஆதரவோடு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டாவது அந்த அணுசக்தி ஒப்பந்தம் போடுவோம் என்ற காங்கிரசின் பிடிவாதத்திற்கு பின்னணிதான் என்ன என்பதுதான் சர்ச்சைக்குரிய கேள்வியே.

இந்திய நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கும், பணவீக்க பயங்கரத்திற்கும், பங்குச்சந்தை சரிவுக்கும் மறைமுக காரணம் அமெரிக்காவாக இருக்குமோ என்ற சந்தேகம் இங்கே ஏற்பட்டிருக்கிறது.

இப்படி எண்ண காரணம் இல்லாமல் இல்லை.

இந்திய தேசத்தின் வீங்கிப்போன பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதும், பொருளாதார தேக்கத்தை சீரமைக்கவும் அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம்தான் ஒரே வழி என கூறப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் தேவை என்கிறது காங்கிரஸ். இது விஷயத்தில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்கு வலுவான காரணமாக நாளைய இந்தியாவின் எரிசக்தி தேவையை எண்ணிப்பார்க்கச் சொல்கிறது.

அமெரிக்கா என்றாலே வேப்பங்காயாக கசக்கும் இடதுசாரிகள், நாளைக்குக் கிடைக்கப்போகும் பிசாத்து 6 சதவிகித மின்சார பலனுக்காக நாட்டைக் கொண்டுபோய் அமெரிக்காவிடம் தத்துக் கொடுப்பதா, அதற்கு அடிமை சாசனம் எழுதித்தருவதா, நாட்டின் பாதுகாப்பை, இறையாண்மையை அடகு வைப்பதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, எதிர்க்கிறார்கள்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நமது பிரதமர், ஜார்ஜ் புஷ்ஷுடன் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம் இங்கே குடியரசுத்லைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர் இடதுசாரிகள்.

ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இந்த அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு கிளம்பிய கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் நாட்டில் அபரிதமான பணவீக்கமும், அந்நிய முதலீடுகள் திரும்ப பெறப்படுதலும் நிகழ்ந்துள்ளன.

அணுசக்தி ஒப்பந்திற்கு எதிரான இடதுசாரிகளின் எதிர்ப்பு என்பது அமெரிக்காவின் கெளரவத்தை குலைக்கும் ஒன்றாகவே இருப்பதை அவர்கள் பார்வையில் இருந்து பார்த்தால் புரியும்.

பணவீக்கம் பற்றி பேசினால் நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரமோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ சரியான பதிலை கூறுவது இல்லை.

அவர்களுக்கு தெரிந்த இரண்டு காரணங்களில் ஒன்று, கச்சா எண்ணெய் விலையேற்றம். மற்றொன்று, உலக அளவிலான விலைவாசி உயர்வு.

இதுகுறித்து சி.என்.என்., ஐ.பி.என். சேனலின் கரண் தப்பார், ப. சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களே வெளிவந்தன.

நமது நிதி அமைச்சர் கூறுவதுப்போல் இது உலக அளவிலான பாதிப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் இந்தியாவைப் பொறுத்தவரையில் நூறு சதவிகித உயர்வு எனப்படுகிறது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை நம்மை விட அதிக பணவீக்கம் காணப்படும் நாடுகளான ஜிம்பாவ்வே, இலங்கை, ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றை நம் நாட்டோடு எப்படி பொருத்திப் பார்ப்பது? அங்கெல்லாம் போராட்டங்களே வாழ்க்கையாக இருப்பது யாருக்கும் தெரியாது என்று நமது அரசியல்வாதிகள் நினைக்கிறார்களா?

இதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் கரம் இருக்குமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. இந்தியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கிட்டதட்ட அமெரிக்கா நெருக்கடியையும் நிர்பந்தத்தையும் செய்துகொண்டிருக்கிறது.

இன்றைக்கு தெற்காசியாவில் வளர்ந்துகொண்டிருக்கும், நாளை  வல்லரசாக மாறக்கூடிய வல்லமை வாய்ந்த, ஒரே ஒரு ஜனநாயக (அமெரிக்காவைப் போல) நாடான இந்தியாவுடன் இந்த அணுசக்தி ஒப்பந்ததை நிறைவேற்றிக்கொள்வது என்பது, தனது பதவியை விட்டு கூடிய விரையில் இறங்கப் போகிற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிற்கு வரலாற்று பதிவாகவே மாறக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இந்திய தேசத்திற்கு உதவுவதுப்போலவும் இருக்கும், தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும் என்பதே அமெரிக்காவின் திட்டம் என்போரும் உண்டு.

மீண்டும் பணவீக்கம் பக்கம் திரும்புவோம்.

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் தாமதம் மற்றும் தடை என்றதும் அமெரிக்காவின் ஆளுமைத் தன்மை பொங்கி எழுகிறது. இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் புழங்கும் அந்நிய முதலீட்டில் பெரும்பங்கு அமெரிக்காவை சேர்ந்தவர்களின் பங்காகும். அணுசக்தி ஒப்பந்த தாமதத்தின் எதிரொலி நமது தேசத்தின் பொருளாதாரத்தில், பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது எனலாம். அமெரிக்காவின் நிர்பந்தத்தால், அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்றுவருவதாகத் தகவல். அதன் தாக்கமே நமது பங்குச்சந்தையின் தள்ளாட்டம்.

பரவலாக கூறப்படும் கச்சா எண்ணெய் மீதான பழிக்கும் அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும். தன்னுடைய எண்ணெய்த் தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ளவும், தனது ஆளுமைச் சக்தியை  நிரூபிக்கவும் அமெரிக்கா செய்யும் காரியங்கள் உலக அளவில் விமரிசனத்துக்கு ஆளாகுபவை. தான் வாழ, உலக நாடுகளில் குழப்பம் விளைவிப்பதில் அமெரிக்காவை விஞ்ச வேறு யாரும் இன்னும் பிறக்கவில்லை.

இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னணியாக அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் இருப்பதை கவனிக்கவேண்டும்.

ஆட்சியே கவிழ்ந்தாலும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் என்று ஆளும் காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதின் பின்னணி காரணம் நாட்டின் நலன் மட்டும்தானா?

இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் மட்டுமே பங்குச் சந்தை பழைய நிலைக்கு திரும்பும், பொருளாதார வீழ்ச்சியை, விலைவாசியைத் தடுப்பதும் சாத்தியம் என்பதும் இதற்குள் ஒளிந்திருக்கும் காரணமோ?

அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் நழுவுகிறார்களோ?

ஒருவேளை அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதும் பணவீக்கம் குறைந்து, பொருளாதாரம் தலை நிமிர்ந்து, பங்குச்சந்தை ஒரு சமதளத்திற்கு வந்ததும் தேர்தலில் அதையே வெற்றி முழக்கமாக, ஓட்டுக் கேட்கும் காரணியாக நமது அரசியல்வாதிகள் கையாளக்கூடும்.

அப்போதுதான் நாமும் நமது கைவரிசையை காட்டவேண்டும்!

Thursday, September 25, 2008

இதயம் கொடுத்த ஹிதேந்திரன் - தானம் செய்வோம்

 

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளேயே அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. பால் மணம் மாறாத 16 வயதினிலே ஹிதேந்திரன் விட்டுச்சென்ற இதயம் இந்த நேரம் ஒரு குழந்தையின் நெஞ்சுக்குழிக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

இந்த செய்தியை தினகரன் நாளிதழில் படித்தபோது நெஞ்சம் கொஞ்சம் கணத்துப்போனது.

image

"...தாய் தந்தையருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற மகன் விபத்தில் சிக்கினான். மூளை  செயல் இழந்ததால் அவனைக் காப்பாற்ற முடியாத நிலை. என்ன செய்வார்கள் பெற்றோர்கள்?

ஹிதேந்திரனின் பெற்றோர் உடனே முடிவு செய்தனர். மகனின் துடிக்கும் இதயத்தை, இன்னொரு உடலில் துடிக்கவைக்க.

ஒளிவேகத்தில் அம்மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தார் காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர்.

அங்கே காத்திருந்த மருத்துவர் குழு வேகமாக செயல்பட்டு, அந்த இதயத்தை நோயாளி ஒருவருக்குப் பொருத்தி மறுவாழ்வு அளித்தது.

இது நடந்தது சென்னையில். திருக்கழுகுன்றத்தில் வீடு, கிளினிக் என்று இருக்கும் மருத்துவ தம்பதிகளான அசோகன், புஷ்பாஞ்சலியின் மூத்த மகன் ஹதேந்திரன்(16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தான்.

அன்று சனிக்கிழமை (20/09/08)… பெற்றோருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனைப் பார்க்க கிளம்பினான் ஹிதேந்திரன். வீட்டுக்குத் திரும்புகையில், வீட்டிற்கு மிக சமீபத்தில் மீன்பாடி வண்டி ஒன்றில் தொங்கிய கம்பி ஒன்றில் இடிபட்டு, அதே வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் ஆறாக ஓடியது. அவனோ மயக்கமானான்.

அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், வீட்டிற்கும் தகவல்கொடுத்தனர். தந்தை அசோகன் மருத்துவமனைக்கு விரைந்தார். ஹிதேந்திரா கடைசிவரை விழிக்கவில்லை.

சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு ஹிதேந்திரன் கொண்டுவரப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அடிபட்ட அதிர்ச்சியயில் ஹிதேந்திரனின் மூளை செயலிழந்து விட்டதாகவும் இனியும் செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினர்.

மருத்துவ தம்பதிகள் என்பதால உடனடியாகப் புரிந்து கொண்டனர் அவனுடைய பெற்றோர். அவனுடைய உடலுறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.

நேற்று காலை ஹிதேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயாவிற்கு அனுப்பப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயம் மேலே சொன்ன வேகத்தில் ஜெ.ஜெ. நகரில் உள்ள் செரியன் இதய மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஒன்பது வயது தமிழ்ச் சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த மனிதநேயத்துக்கு காவல்துறை பக்கபலமாகச் செயல்பட்டது.

ஹிதேந்திரன் என்ற சொல்லுக்கு இதயத்தை கொள்ளை கொள்பவன் என்று அர்த்தமாம்..."

இந்த நேரத்தில் எல்லோருடைய இதயத்தையும் கொள்ளை கொண்டவர்கள் ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி தான். ஒரு தாய் எப்போது மகிழ்ச்சி அடைவாள் என்றால்... பிறர் தன் மகனை சான்றோன் என்று கூறும் போது தான். ஆனால் இந்த கலி காலத்தில் சான்றோன் என்ற சொல்லே கடலில் கரைத்த பெருங்காயமாய் மறைந்து போனது. இப்போது வாழும் போது பிறர்க்கு உதவி செய்யும் மகான்களை விட சாகும் போதும் இந்த உலகிற்கு எதையாவது விட்டுச்செல்லும் மனதர்கள் மேலானவர்கள்.

உதவி என்பது எல்லா காலத்திலும் எல்லாராலும் செய்யமுடியாது. அதைவிட இதயத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. குறிப்பாக சராசரி மனிதர்கள் மரணப்படுக்கையில் தன் உறவினர் இருந்தாலும் கூட அவரை கடைசி நிமிடம் வரை பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஹிதேந்திரனின் பெற்றோர் தன் மகன் மூளை செயல் இழந்து விட்ட நிலையில் இன்னொரு உடலில் அவன் இதயமாவது துடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களே.... அவர்களை போன்ற மனிதர்கள் ஊருக்கு நாலு பேராவது வேண்டும். சிறுநீரகங்கள்.... கண்கள், நுரையீரல், கல்லீரல் என அத்தனை உடலுறுப்புகளையும் பிறருக்கு வழங்கியது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பகவத்கீதையை நம்புகிறோமோ இல்லையோ அதில் கூறப்பட்ட வாசகம் உண்மையானது.

"எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு?"

இழப்புக்கள் ஒரு புறம் இருந்தாலும் எதையாவது விட்டுச்செல்வோம்.

  • ஹித்தேந்திரனை போல இதயத்தை கொடுக்க முடியாவிட்டாலும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முன்வருவோம். அது இறப்பிற்கு உங்களை உலகத்தை பார்க்க வைக்கும்.
  • ஒரு சொட்டு குருதியை பிறருக்கு அளித்தாலும் உங்கள் ரத்தம் ஓடும் மனிதர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் வாழ்த்துவார்கள்.
  • இருக்கும் போது ரத்த தானம் செய்வோம். இறந்த பின்
    உடல்தானம் செய்வோம்.